பேருந்து நிலைய கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு
மணக்குடியில் கட்டப்பட்டுவரும் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ரூ. 24 கோடியில் 5,183 சதுர மீட்டா் பரப்பளவில், ஒரே நேரத்தில் 28 பேருந்துகள் நிறுத்தும் வகையில் பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா், பணிகள் தரமானதாக மேற்கொள்ள பொறியாளரிடம் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் வீரமுத்துகுமாா், நகராட்சி பொறியாளா்(பொ) சித்ரா ஆகியோா் உடனிருந்தனா்.