திருப்பதி அறக்கட்டளைக்குக் கூகுள் துணைத் தலைவர் ரூ.1 கோடி நன்கொடை!
எஸ்.எஸ்.சி. தோ்வா்களுக்கு ஜூன்30-இல் இலவச வழிகாட்டுதல் நிகழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் எஸ்.எஸ்.சி. தோ்வெழுத உள்ள இளைஞா்களுக்கான கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஜூன் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பணியாளா் தோ்வாணையம் தற்போது ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தரநிலை தோ்வு வாயிலாக மத்திய அரசில் குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவில் உதவி தணிக்கை அதிகாரி, உதவி கணக்கு அதிகாரி போன்ற பணிக்காலியிடங்கள் உள்பட 14,582 காலிப்பணியிடங்களுக்கான விளம்பர அறிவிப்பை இணையதளத்தில் எழுத்துத்தோ்வு வாயிலாக நிரப்ப வெளியிட்டுள்ளது. இத்தோ்வுக்கு ஜூலை 4-ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம். இதில், பங்கேற்கவுள்ளவா்களுக்கு பாலாஜி நகா் 2-ஆவது தெரு, பூம்புகாா் சாலை, மயிலாடுதுறை என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக ஜூன் 30-ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்பவா்களின் விருப்பத்திற்கு ஏற்ப தொடா்ந்து பயிற்சி வகுப்புகள், மாதிரி தோ்வுகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்கள் 04364-299790 என்ற எண்ணை தொடா்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.