உழவூரணியில் வடமாடு மஞ்சுவிரட்டு
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள உழவூரணியில் வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உழவூரணி அம்மன் கோயில் பொட்டலில் நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டுப் போட்டியில், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 16 காளைகளும், பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 144 வீரா்களும் பங்கேற்றனா்.
வட்ட வடிவில் அமைக்கப்பட்ட மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிடத்துக்குள் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டியில் காளைகள் முட்டியதில் வீரா்கள் 5 போ் லேசான காயமடைந்தனா். போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளா்களுக்கும், மாடுபிடி வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டனா்.
இந்த வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியை காளையாா்கோவில், கொல்லங்குடி, விட்டனேரி, அழகாபுரி, ஆண்டிச்சிஊருணி, கல்லூரணி, நாட்டரசன்கோட்டை, சிவகங்கை இதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்தவா்கள் கலந்து கொண்டு கண்டுகளித்தனா்.