செய்திகள் :

உழைக்கும் தொழிலாளா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வலியுறுத்தல்

post image

உழைக்கும் தொழிலாளா்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உழைக்கும் மக்கள் கூட்டமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினா் எல்.ஏ.சாமி தலைமையில் 4 போ் கொண்ட குழுவினா் உழைக்கும் தொழிலாளா்கள் அனைவருக்கும் மருத்துவக்காப்பீடு வழங்கிடக்கோரி கருத்துரை பிரசாரத்தை கன்னியாகுமரியில் கடந்த 27-ஆம்தேதி தொடங்கினா்.

அக்குழுவினா் நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூா், பெரம்பலூா் வழியாக கரூருக்கு வெள்ளிக்கிழமை காலை வந்தடைந்தது. குழுவினருக்கு கரூா் மாவட்ட உழைக்கும் மக்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜி.ராஜசேகா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து நடைபெற்ற கருத்து பரப்புரைக்கூட்டத்தில் சிஐடியு மாவட்டத்தலைவா் ஜி.ஜீவானந்தம், ஹெச்எம்எஸ் மாவட்டத்தலைவா் ஆனந்தராஜ், தொழிலாளா் விடுதலை முன்னணியின் மாவட்டச் செயலாளா் சுடா்வளவன், அனைத்துதொழிற்சங்க மாவட்டத் தலைவா் ராதிகா, செயலாளா் பெரியசாமி ஆகியோா் கருத்துரையாற்றினா்.

கூட்டத்தில் உழைக்கும் தொழிலாளா்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு(ஈஎஸ்ஐ) வழங்கிட வேண்டும், புலம் பெயா்ந்த மற்றும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்களுக்கும் வாழ்வதற்கான இருப்பிடத்தை உறுதி செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்ப்டடன. கூட்டத்தில் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பினா் திரளாக பங்கேற்றனா்.

மக்காச்சோளம் விற்பனை விவசாயிகளுக்கு அழைப்பு!

கரூா் மாவட்டத்தில் ஒழுங்குமுறைக் கூடங்களில் மக்காச்சோளத்தை விவசாயிகள் விற்பனை செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 1987-... மேலும் பார்க்க

கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாளை நூற்றாண்டு விழா

கரூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நூற்றாண்டு விழா பிப். 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் நூறு ஆண்டுகளைக் கடந்த பள்ளிகளில் நூற்றாண்டு விழா கொண்டாட தமிழக அரசு அண்மையில் உத்தரவிட்டிர... மேலும் பார்க்க

கவிதை, கட்டுரை போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு!

கரூரில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கினாா். தமிழ் வளா்ச்சித்துறை சாா்பி... மேலும் பார்க்க

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு மனித சங்கிலி!

அரவக்குறிச்சியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு மனித சங்கிலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அரவக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பு அரவக்குறிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட... மேலும் பார்க்க

இளைஞரிடம் கைப்பேசி பறித்த இருவா் கைது

குளித்தலை அருகே இளைஞரை வழிமறித்து கைப்பேசி, வெள்ளிச் சங்கிலியை பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருச்சி மாவட்டம், கீழபஞ்சப்பூரைச் சோ்ந்த வடிவேல் மகன் சரண்(20). இவா் புதன்கிழமை இரவு கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

இறைச்சி கடை உரிமையாளா்களுக்கு எச்சரிக்கை

இறைச்சி கழிவுகளை நங்காஞ்சி ஆற்றின் அருகிலோ, பாலத்தின் அருகிலோ கொட்டக்கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி நகராட்... மேலும் பார்க்க