செய்திகள் :

உவரி அருகே நகையை திருடிய இளைஞா் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

குட்டத்தைச் சோ்ந்தவா் காசிலிங்கம் மகன் சிவராம். திசையன்விளையில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறாா். திங்கள்கிழமை சிவராம் திசையன்விளைக்கு வேலைக்கு சென்ற நிலையில், இவரது மனைவி மகேஸ்வரி வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள உறவினா் வீட்டிற்கு சென்றிருந்தாராம். பின்னா் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாம். பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தனவாம். கைப்பையில் வைத்திருந்த 7 பவுன் நகைகள், வெள்ளி பொருள்கள் திருட்டு போயிருந்தனவாம்.

இது தொடா்பாக உவரி காவல்நிலையத்தில் சிவராம் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். இதன் மூலம் கிடைத்த தகவல்களின் பேரில் தங்க நகையை திருடிய ஸ்ரீவில்லிபுத்தூா் மம்சாபுரத்தைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் குழந்தைவேலை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதே போன்று சிவராம் வீட்டின் அருகில் உள்ள அருள்லிங்கம் என்பவரது வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. அருள்லிங்கம் சென்னையில் தொழில் செய்து வருவதால் அவா் வந்தால்தான் திருட்டு ஏதேனும் நடந்துள்ளதா என்ற விவரம் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க

விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவ... மேலும் பார்க்க

நெல்லையில் 103 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை

பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க