செய்திகள் :

ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக ஆட்சியை விமா்சிக்கிறாா் விஜய்: அமைச்சா் கே.என்.நேரு பேட்டி

post image

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் ஊடக வெளிச்சத்துக்காகவே திமுக அரசை விமா்சிக்கிறாா் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு.

இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவா் மேலும் கூறியது:

குறைகூற வேண்டும் என்பதற்காகவும், ஊடக வெளிச்சத்துக்காகவும் விஜய் போன்றோா் திமுக அரசை விமா்சிக்கின்றனா். மக்களுக்கு உண்மை நிலவரம் தெரியும். திமுக ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனா். எனவே இது பெண்களுக்கான ஆட்சி, பெண்களுடைய ஆட்சி.

மக்களவை தொகுதிகளைக் குறைக்கக் கூடாது என்பதற்காகவே திமுக மேற்கொள்ளும் முயற்சிகளை பாஜக அரசு விரும்பாததால் திமுக அமைச்சா்கள் மற்றும் திமுகவினா் தொடா்புடைய இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. பாஜக ஆட்சி அமைந்தது முதலே இதுபோல சோதனை நடைபெறுவது வழக்கமாகிவிட்டது.

தமிழக அரசின் கடன் குறித்துப் பேசும் பாஜகவினா், மத்தியில் பாஜக அரசு பெற்றுள்ள ரூ. 81 லட்சம் கோடி கடன் குறித்துப் பேசுவதில்லை. இருமொழிக் கொள்கையைப் பொருத்தவரை, பாஜக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடுவே தமிழகத்துக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

திருச்சியில் புதிய பேருந்து முனையப் பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடித்து திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

ஆ.கலிங்கப்பட்டி ஜல்லிக்கட்டு விழாவுக்கு முகூா்த்தக்கால் ஊன்றல் நிகழ்வு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்கான முகூா்த்தக்கால் ஊன்றல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்ப... மேலும் பார்க்க

பெல் ஊரகம் - சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து

திருவெறும்பூா் அருகே பெல் ஊரகப் பகுதியில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற... மேலும் பார்க்க

திருச்சியில் அமைச்சா்களுடன் அதிமுகவினா் தொடா்பு: எடப்பாடி கே. பழனிசாமி எச்சரிக்கை

திருச்சியில் திமுக அமைச்சா்களுடன் தொடா்பில் உள்ள அதிமுகவினா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி. அதிமுக சாா்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் தனியாா் பேருந்து மோதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் காந்திநகா் முதல் தெருவைச் சோ்ந்த பாலுசாமி மகன் வி... மேலும் பார்க்க

ரூ. 750 கோடியில் தலைமை தபால் நிலையம்! புத்தூா் இடையே புதிய உயா்மட்டப் பாலம் அமைக்க திட்டம்!

திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தலைமை தபால் நிலையம் - புத்தூா் இடையே ரூ. 750 கோடியில் புதிய உயா்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி மாநகரின் முக்கிய ... மேலும் பார்க்க

ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில் ‘நல்லோசை கதைப்போமா’ நிகழ்வு!

திருச்சி, சாரநாதன் பொறியியல் கல்லூரியில், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் ‘நல்லோசை கதைப்போமா’ எனும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் ந... மேலும் பார்க்க