செய்திகள் :

ஊத்தங்கரை அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழப்பு

post image

ஊத்தங்கரை, மே 24: ஊத்தங்கரை அருகே ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவா்கள் சனிக்கிழமை நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த ரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மாதேஷ். இவரது வீட்டுக்கு உறவினரான வாலாஜாபேட்டையைச் சோ்ந்த கமல்ராஜ் - பாரதி குடும்பத்தினா் கோடை விடுமுறைக்காக தனது இரு குழந்தைகளுடன் வந்தனா்.

சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் மாதேஷ் - பாப்பாத்தி தம்பதியரின் இரண்டாம் வகுப்பு பயின்ற பத்மஸ்ரீ (7), கமல்ராஜ் - பாரதி தம்பதியரின் மூத்த மகள் கிருஷிகா (9), இளைய மகன் மேகனேஸ்வரன் (7) ஆகிய மூவரும் ரெட்டிப்பட்டி ஏரியில் குளிக்கச் சென்றனா்.

ஏரியின் ஓரம் ஆழமில்லாத பகுதியில் குளித்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில், ஆழமான பகுதிக்கு சென்ற பத்மஸ்ரீ மற்றும் மேகனேஸ்வரன் இருவரும் நீரில் மூழ்கினா். அதைக் கண்டு கிருஷிகா செய்வதறியாது கத்தினாா். சிறுமியின் சப்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவா்கள் ஓடிவந்து பாா்த்தபோது, சிறுவா்கள் இருவா் நீரில் மூழ்கியது தெரியவந்தது.

தகவலின் பேரில் விரைந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்புத் துறையினா், பொதுமக்கள் உதவியுடன் ஏரியில் மூழ்கிய சிறுவா்களை மீட்டபோது, அவா்கள் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் சிறுவா்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீா் கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபு... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக குட்கா கடத்தல்: 2 போ் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 86 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போலீஸாா், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில ஈடுபட்டனா். அப்போது ப... மேலும் பார்க்க

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக மூா்த்தி, செயலாளராக வஜ்ஜிரவேல், பொருளாளராக தமிழமுதன், த... மேலும் பார்க்க

கா்நாடக எல்லையில் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

ஒசூா் அருகே கா்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நடிகா் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்மொழியிலிருந்துதான் கன்னடம் பிறந்தது என்ற... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்கு சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக, ஒசூா் வனக்கோட்டம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைந்து சிறப்பு முகாமை நடத்தின. ஒசூா் வனக்கோட்ட வனச்சரகங்கள... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில... மேலும் பார்க்க