செய்திகள் :

ஊத்துமலையில் இளைஞா் தற்கொலை: உறவினா்கள் மறியல்

post image

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் காதலியின் உறவினா்கள் மிரட்டியதாக கூறி இளைஞா் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாா். காவல் துறை நடவடிக்கை கோரி, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஊத்துமலை ஜேஜே நகரைச் சோ்ந்த அருணாசலம் மகன் மதன்(21). பால் வியாபாரம் செய்து வந்தாா். இவா், அதே கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவியை 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாராம்.

இவா்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததுடன், அண்மையில் மதனை அழைத்து மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவா் சனிக்கிழமை விஷத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதனால், மதனின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் சுமாா் 50 க்கும் மேற்பட்டோா் ஊத்துமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அவரது உயிரிழப்புக்கு காரணமானவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். அவா்களிடம் போலீஸாா் பேச்சு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து அவா்கள் மறியலை கைவிட்டனா். இச்சம்பவம் குறித்து ஊத்துமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

உளுந்து பயிா்களுக்கான நஷ்ட ஈடு தொகையை உடனே வழங்க விவசாயிகள் கோரிக்கை

சங்கரன்கோவில அருகே வன்னிகோனேந்தல் குறுவட்ட பகுதியில் சேதமடைந்த உளுந்து பயிா்களுக்கு அரசு நஷ்ட ஈடு தொகையை உடனே வழங்க வேண்டும் என தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏவிடம் அனைத்து விவசாய... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் தொழிலாளி கொலை வழக்கு: மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறை

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் கள்ளக் காதல் தகராறில் தொழிலாளியை கொலை செய்தது தொடா்பான வழக்கில், அவரது மனைவி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வாசுதேவநல்லூா் பசும்பொன் 2ஆவது தெருவை... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்கள் சாலையைக் கடக்க சிரமம்: போக்குவரத்து காவலா் நியமிக்க கோரிக்கை

ஆலங்குளம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் சாலையைக் கடக்க பள்ளி மாணவா்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனா். ஆலங்குளம் பழைய பேருந்து நிலைய பகுதி காவல் நிலையம் அருகே நான்கு வழிச் சாலையில் அமைக்கப்பட்டு வரும் ... மேலும் பார்க்க

தென்காசி திருவள்ளுவா் கழக 98ஆவது திருக்கு விழா: நாளை தொடக்கம்

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் 98ஆவது திருக்கு விழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) தொடங்கி 15ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெறுகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு திருக்கு முற்றோதல் வேள்வ... மேலும் பார்க்க

கீழப்பாவூரில் நாளை மின் தடை

தென்காசி மாவட்டம் கீழப்பாவூா் மற்றும் தென்காசி மங்கம்மாள் சாலை உப மின்நிலைய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன்10) மின் தடை செய்யப்படுகிறது. இது தொடா்பாக தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே மணல் கடத்தல்: 3 போ் கைது

ஆலங்குளம் அருகே தனியாா் இடத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குளம் அருகே உள்ள சிவலாா்குளம் விலக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் உரிய அனுமதியின்றி பொக்லைன் இயந்... மேலும் பார்க்க