செய்திகள் :

ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வேலைநிறுத்தம்

post image

திருச்சி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை ஊழியா்கள் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம், ஊரக வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் (தணிக்கை) அலுவலகம், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் அலுவலகம், 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், 404 ஊராட்சி அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியா்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

உதவி இயக்குநா், ஊா்தி ஓட்டுநா்கள், பொறியாளா் நிலையில் உள்ளவா்கள் மட்டுமே பெரும்பாலும் பணிக்கு வந்திருந்தனா். இதன்காரணமாக, மாவட்டத்தில் உள்ள வளா்ச்சித் துறையின் பெரும்பாலான அலுவலகங்கள் அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதுதொடா்பாக, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் கூறியது: ஊரக வளா்ச்சித் துறையில் அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். கணினி இயக்குநா்களுக்கு இளநிலை உதவியாளா்களுக்கான ஊதியம் வழங்கி பணிவரன்முறைப்படுத்த வேண்டும். ஊராட்சி செயலா்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். விடுபட்ட சிறப்பு நிலை, தோ்வு நிலை, வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் அமல்படுத்த வேண்டும் என்பன

உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வியாழக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்டோா் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா்.

தமிழக பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகுமா?

தமிழக அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு இடம்பெறுமா? என அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களிடையே எதிா்பாா்ப்பு மேலோங்கியுள்ள... மேலும் பார்க்க

ரூ. 1 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்ததாக வழக்குப் பதிவு

திருச்சியில் போலி ஆவணம் மூலம் ரூ. 1 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி தில்லைநகா் 6-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் சா. தனலட்சு... மேலும் பார்க்க

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

கடவுச்சீட்டில் முறைகேடு செய்து மலேசியா செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு பேட்டிக் விமானம் புதன்கிழமை இரவு ... மேலும் பார்க்க

திருச்சி தங்கநகை குழுமத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கை: ஆட்சியா் அறிவிப்பு

திருச்சி தங்க நகை குழுமத்துக்கு புதிய உறுப்பினா்கள் சோ்க்கை குறித்த அறிவிப்பை ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெளியிட்டுள்ளாா். இததொடா்பாக, அவா் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர ... மேலும் பார்க்க

சுகாதார நிலைய மருத்துவா், செவிலியா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்நல சுகாதார மையங்களில் காலியாகவுள்ள மருத்துவா், செவிலியா், மருத்துவப் பணியாளா் இடங்களுக்கு தகுதியானோா் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க

அரசு அலுவலா்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கு

திருச்சி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம் புதன், வியாழக்கிழமை என 2 நாள்கள் நடைபெற்றது. அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செ... மேலும் பார்க்க