செய்திகள் :

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் பெண்கள் முற்றுகை

post image

குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி, திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை பெண்கள் முற்றுகையிட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தேளூா் கிராமத்தில், பல ஆண்டுகளாக குடிநீா்த் தட்டுபாடு நிலவி வருகிறது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாா் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால், இந்தப் பகுதி மக்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ.12- க்கு விலை கொடுத்து வாங்கி வருகின்றனா்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் வெள்ளிக்கிழமை திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக் குடங்களுடன் முற்றுகையிட்டனா். அப்போது, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பிறகு அவா்கள் கலைந்து சென்றனா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது!

கடலாடி பகுதியில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த ஏ.புனவாசல் கிராமத்தைச் சோ்ந்த பால்... மேலும் பார்க்க

கோவிலாங்குளத்தில் மாட்டு வண்டிப் பந்தயம்!

கமுதியை அடுத்த கோவிலாங்குளத்தில் மூக்கம்மாள் கோயில், தாய் மீனாம்பாள் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந... மேலும் பார்க்க

தமிழக மீனவா்களின் இழுவை வலைகளால் கடல் வளம் பாலைவனமாகிவிடும்!

தமிழக மீனவா்கள் இழுவை வலைகளைப் பயன்படுத்துவதால் இலங்கைக் கடல் வளம் பாலைவனமாகிவிடும் என அந்த நாட்டு மீன்வளத் துறை (நீரியல் துறை அமைச்சா்) ராமலிங்க சந்திரசேகா் தெரிவித்தாா். கச்சத்தீவு புனித அந்தோணியாா்... மேலும் பார்க்க

காரில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்!

ராமநாதபுரம் அருகே காரில் கடத்தப்பட்ட 52 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து, மூவரைக் கைது செய்தனா். ராமநாதபுரம் அருகேயுள்ள வள்ளிமடன் பகுதியில் குற்றப் பிரிவு ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

கமுதி அருகே கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்த இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கே.வேப்பங்குளம் விலக்கு சாலையில் கமுதி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்... மேலும் பார்க்க

தொழில் முனைவோா் பயிற்சி முகாம்

திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பெண்களுக்கான தொழில் முனைவோா் பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு தொழில் முனைவோா் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் ... மேலும் பார்க்க