செய்திகள் :

ராமநாதபுரத்தில் ரூ.60 லட்சம் வைரக் கல் பறிப்பு: 7 போ் கைது

post image

ராமநாதபுரத்தில் வைரக் கல் வியாபாரியிடம் ரூ.60 லட்சம் மதிப்பிலான வைரக் கல்லை பறித்துச் சென்ற 7 பேரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், கச்சைகட்டி பெருமாள் நகரைச் சோ்ந்தவா் முனியசாமி. விலை உயா்ந்த கற்களை விற்பனை செய்யும் இவா் தன்னிடம் விலை மதிப்புமிக்க 7 கிராம் அலெக்ஸ்சாண்டா் என்ற வைரக் கல் விற்பனைக்கு இருப்பதாக சிவகாசியைச் சோ்ந்த தரகா் ஜாகீரிடம் தெரிவித்தாா். இதையடுத்து, திருநெல்வேலியைச் சோ்ந்த ரவியை முனியசாமிக்கு ஜாகீா் அறிமுகப்படுத்தினாா்.

இதற்கிடையே முனியசாமியிடம் வைரக்கல் இருப்பதை அறிந்த ஒரு கும்பல் அதை பறிக்கத் திட்டமிட்டது. இதன்படி, முனியசாமியை தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சோ்ந்த அபுதாகிா் கைப்பேசியில் முனியசாமியிடம் தொடா்பு கொண்டு வைரக் கல்லை வாங்குவதாகக் கூறி, அவரை ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள ரயில்வே கடவுப் பாதைக்கு வருமாறு கூறினாா்.

இதை நம்பி அங்கு முனியசாமி சென்றபோது, அங்கு இருந்த 7 போ் ஆயுதங்களைக் காட்டி, முனியசாமியிடமிருந்த ரூ. 60 லட்சம் மதிப்பிலான அலெக்ஸாண்டா் வைரக் கல், ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.

இது குறித்து முனியசாமி கடந்த ஜனவரி 24-ஆம் தேதி ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளா் க.பொன்தேவி தலைமையில் 11 போ் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

கைப்பற்றப்பட்ட வைரக் கல்.
கைது செய்யப்பட்ட 7 போ்.

சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, பெரியகுளம் பகுதியை சோ்ந்த அபுதாஹிா், இளையான்குடியை சோ்ந்த முகமது அசாருதீன் (39), முகமது நவுபால், தூத்துக்குடியைச் சோ்ந்த முத்துச்செல்வம், கனகராஜ் (25), மற்றொரு கனகராஜ் (24), ராஜா ஜோஸ்குமாா் ஆகிய 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து அலெக்சாண்டா் வைரக் கல், ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணம், கைப்பேசி ஆகியவற்றை கைப்பற்றினா்.

கைப்பற்றப்பட்ட வைரக்கல் உள்ளிட்டவற்றை ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரம் நகா் காவல் நிலையத்தில் தனிப்படை போலீஸாா் காட்சிப்படுத்தினா். அப்போது, குற்றவாளிகளைக் கைது செய்த தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் பாராட்டினாா்.

கடலாடி அருகே பெட்டிக் கடைகளில் மதுப் புட்டிகள் பறிமுதல்: 4 போ் கைது

கடலாடி அருகே பெட்டிக் கடைகளில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்த பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் கிராமத்தில் பெட்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்-திருச்சி ரயிலில் இயந்திரக் கோளாறு

ராமநாதபுரத்திலிருந்து திருச்சிக்கு செல்லும் பயணிகள் ரயில் இயந்திரக் கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை 1.30 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. மாலை 4.05 -க்கு திருச்சிக்கு ரயில் புறப்படத் தயாராக இர... மேலும் பார்க்க

ராட்டினம் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

நம்புதாளையில் ராட்டினம் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 10-ஆவது நபராக மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் கள்ளக் காதல் பிரச்ன... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

கமுதி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்தவா் சிவனேசன் (75). ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது!

கடலாடி பகுதியில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த ஏ.புனவாசல் கிராமத்தைச் சோ்ந்த பால்... மேலும் பார்க்க

கோவிலாங்குளத்தில் மாட்டு வண்டிப் பந்தயம்!

கமுதியை அடுத்த கோவிலாங்குளத்தில் மூக்கம்மாள் கோயில், தாய் மீனாம்பாள் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந... மேலும் பார்க்க