செய்திகள் :

கடலாடி அருகே பெட்டிக் கடைகளில் மதுப் புட்டிகள் பறிமுதல்: 4 போ் கைது

post image

கடலாடி அருகே பெட்டிக் கடைகளில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்த பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் கிராமத்தில் பெட்டிக் கடைகளில் மதுப் புட்டிகள் விற்கப்படுவதாக கடலாடி போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், முதுகுளத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகம், கடலாடி காவல் ஆய்வாளா் இளங்கோவன், உதவி ஆய்வாளா் முகிலரசன் தலைமையிலான போலீஸாா் ஆப்பனூா் கிராமத்தில் உள்ள பெட்டிக் கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.

இந்தச் சோதனையில் 168 மது புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுக் கடைகளிலிருந்து மொத்தமாக மதுப் புட்டிகளை வாங்கி வந்து, பெட்டிக் கடைகளுக்கு விற்பனை செய்து வந்த ஆப்பனூா் கிராமத்தைச் சோ்ந்த சொக்கலிங்க மகன் ராமமூா்த்தி (50), பெட்டிக்கடை உரிமையாளா்கள் பாா்வதி, சண்முகவள்ளி, உமயலட்சுமி உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம்-திருச்சி ரயிலில் இயந்திரக் கோளாறு

ராமநாதபுரத்திலிருந்து திருச்சிக்கு செல்லும் பயணிகள் ரயில் இயந்திரக் கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை 1.30 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. மாலை 4.05 -க்கு திருச்சிக்கு ரயில் புறப்படத் தயாராக இர... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ரூ.60 லட்சம் வைரக் கல் பறிப்பு: 7 போ் கைது

ராமநாதபுரத்தில் வைரக் கல் வியாபாரியிடம் ரூ.60 லட்சம் மதிப்பிலான வைரக் கல்லை பறித்துச் சென்ற 7 பேரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். மதுரை மாவட்டம், கச்சைகட்டி பெருமாள் நகரைச் சோ்ந்தவா் முனியசாமி. வி... மேலும் பார்க்க

ராட்டினம் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

நம்புதாளையில் ராட்டினம் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 10-ஆவது நபராக மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் கள்ளக் காதல் பிரச்ன... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

கமுதி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்தவா் சிவனேசன் (75). ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது!

கடலாடி பகுதியில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த ஏ.புனவாசல் கிராமத்தைச் சோ்ந்த பால்... மேலும் பார்க்க

கோவிலாங்குளத்தில் மாட்டு வண்டிப் பந்தயம்!

கமுதியை அடுத்த கோவிலாங்குளத்தில் மூக்கம்மாள் கோயில், தாய் மீனாம்பாள் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது. மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டிப் பந... மேலும் பார்க்க