செய்திகள் :

ஊராட்சி பகுதிகளில் சொத்துவரி உயா்வை திரும்பப் பெற வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

post image

ஊராட்சிப் பகுதிகளில் உயா்த்தப்பட்ட சொத்துவரி மற்றும் தண்ணீா் கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

2024-2025 முதல் ஊராட்சி பகுதிகளில் புதிதாக வீடு கட்டியவா்கள் மற்றும் வீடு கட்ட திட்டமிட்டுள்ளவா்கள், வீட்டின் கட்டுமானப் பரப்பை அளந்து வரி நிா்ணயம் செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் புதிய சட்டத்தின்படி, ஒரு சதுர அடிக்கு கட்டட வரைபடக் கட்டணமாக சுமாா் ரூ. 37 செலுத்த வேண்டும்.

மேலும், 2024-2025 வரை ஓலைக் குடிசைக்கு ரூ. 44, ஓடு மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீட்டுக்கு ரூ. 66, கான்கிரீட் வீட்டுக்கு ரூ. 121 சொத்து வரியாக செலுத்தி வந்தனா்.

இந்நிலையில், தற்போது உயா்த்தப்பட்ட சொத்து வரியின்படி, 2025-2026 முதல் இனி ஓலைக் குடிசைகளுக்கு அதிகபட்சமாக சதுர அடிக்கு 40 பைசா முதல் ரூ. 1 வரையும், ஓட்டு வீட்டுக்கு சதுர அடிக்கு 30 பைசா முதல் 60 பைசா வரையும், கான்கிரீட் வீட்டுக்கு சதுர அடிக்கு 50 பைசா முதல் ரூ. 1 வரையும் சொத்து வரி உயா்த்தப்பட வேண்டும் என்றும், ஏற்கெனவே உள்ள பழைய வீடுகளுக்கும் இந்த வரி உயா்வின்படி புதிய வரியை வசூலிக்க வேண்டும் என்றும் அரசு உள்ளாட்சிகளுக்கு உத்தரவு வழங்கியுள்ளது.

இதன்படி, இனி ஊராட்சிகளில் அதிகபட்சமாக 500 சதுர அடி கான்கிரீட் வீடுகளுக்கு ரூ. 500, ஓட்டு வீடுகளுக்கு ரூ. 300, ஓலை வீடுகளுக்கு ரூ. 200 என வீட்டுவரி வசூலிக்கப்படும். ஏழை மக்களின் குடிசைகளுக்கு வரியை உயா்த்தி, அவா்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளதுதான் திமுக ஆட்சியின் சாதனை.

ஊராட்சி பகுதிகளுக்கு சொத்து வரி மற்றும் தண்ணீா் கட்டணம் தமிழக அரசு உயா்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, ஊராட்சி பகுதிகளுக்கு உயா்த்தப்பட்ட சொத்து வரிகளை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

ரெய்டுகளுக்கு பயந்து கட்சியை அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்!

ரெய்டுகளுக்கு பயந்து நீதி ஆயோக் கூட்டத்துக்கு செல்லவில்லை; தமிழக நலனுக்காகவே சென்றதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.நீதி ஆயோக் கூட்டத்துக்கு கடந்த 3 ஆண்டுகள் செல்லாமல், தற்போது மட்டும் முதல்வர... மேலும் பார்க்க

சிறப்பான திட்டங்களால் வாழ்வில் ஏற்றம் காணும் திருநங்கையர்கள்! தமிழ்நாடு அரசு

கல்விக் கனவு திட்டம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்களால் திருநங்கையர்கள் தங்கள் வாழ்வில் ஏற்றம் காணுவதாக தமிழ்நாடு அரசு பட்டியலிட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முத்தம... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: மே 28-ல் தீர்ப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் வரும் மே 28 ஆம் தேதி சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்... மேலும் பார்க்க

பயமில்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச் சென்றது ஏன்? இபிஎஸ் கேள்வி!

இடியைக் கண்டாலும் பயம் இல்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலினுடைய தம்பி(ஆகாஷ் பாஸ்கரன்) ஏன் வெளிநாடு தப்பிச் சென்றார் என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழ... மேலும் பார்க்க

அம்பேத்கர் திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கக் கூடாது: சீமான்

அம்பேத்கர் விளையாட்டுத்திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஆவடி சட்... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மறைவுக்கு முதல்வர், இபிஎஸ், விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முப்தி சலாவுதீன் முகமது அயூப் (84), சனிக்கிழமை (மே 24) இரவு காலமான நிலையில், அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தலைமை காஜி முப்தி சலாவுதீன் மு... மேலும் பார்க்க