செய்திகள் :

எஃப்டிஐ விதிமுறைகள் மீறல்: பிபிசிக்கு ரூ.3.44 கோடி அபராதம்

post image

அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) விதிமுறைகளை மீறியதாக பிபிசி செய்தி நிறுவனத்தின் இந்திய கிளைக்கு அமலாக்கத் துறை ரூ.3.44 கோடி அபராதம் விதித்துள்ளது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘மத்திய அரசு அனுமதியின் கீழ், டிஜிட்டல் ஊடக நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதமாக மட்டுமே இருக்க வேண்டும்.

இந்நிலையில், இந்தியாவில் டிஜிட்டல் ஊடகமாக செயல்படும் பிரிட்டனின் பிபிசி நிறுவனத்தில் அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதமாக குறைக்கப்படாமல், 100 சதவீதமாகவே நீடித்தது.

இதைத்தொடா்ந்து அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தைப் பல வழிகளில் மீறியது குறித்து விளக்கம் அளிக்குமாறு பிபிசியின் இந்திய கிளை, அதன் மூன்று இயக்குநா்கள், நிதிப் பிரிவுத் தலைவா் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து விதிமீறல் தொடா்பாக அந்த செய்தி நிறுவனத்துக்கு அமலாக்கத் துறை ரூ.3,44,48,850 அபராதம் விதித்துள்ளது. இதுதவிர, அந்த நிறுவனத்தின் 3 இயக்குநா்களுக்கும் தலா ரூ.1.14 கோடிக்கும் அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தன.

தலைமறைவான இரு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கைது

தமிழகத்தில் தலைமறைவாக இருந்து வந்த இரு மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளை க்யூ பிரிவு போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம் பண்ணைபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (41). இவா், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக... மேலும் பார்க்க

கொல்கத்தா- சென்னை விரைவு ரயில் தடம்புரண்டு விபத்து

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா-சென்னை இடையே ஜல்பைகுரி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

கர்நாடகத்திற்கு செல்லும் மகாராஷ்டிர அரசுப் பேருந்து சேவை நிறுத்தம்

பேருந்து தாக்கப்பட்டதையடுத்து, கர்நாடகத்திற்கு செல்லும் அரசுப் பேருந்து சேவையை மகாராஷ்டிரம் நிறுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த மகாராஷ்டிர அரசுப் பேருந்து, கர்நாடகத்தி... மேலும் பார்க்க

3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி பிப்ரவரி 23 முதல் 25 வரை மத்தியப் பிரதேசம், பிகார், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி 23ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்திற்குச் செல்லு... மேலும் பார்க்க

சுரங்க விபத்து: ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலங்கானா சுரங்க விபத்தில் மீட்புப் பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அணையில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் கட... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் குடும்பத்துடன் புனித நீராடிய ஜெபி. நட்டா

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, தனது குடும்பத்துடன் சனிக்கிழமை புனித நீராடினார்.நட்டாவுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ... மேலும் பார்க்க