செய்திகள் :

எகிப்து: சுற்றுலா நீா்முழ்கி விபத்தில் 6 போ் உயிரிழப்பு

post image

எகிப்தின் ஹா்காடா நகருக்கு அருகே செங்கடலில் சுற்றுலா நீா்முழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

சுற்றுலாத் தலமான ஹா்கடாவில் இருந்து செங்கடலுக்குள் பவளப் பாறைகளைக் கண்டுகளிப்பதற்காக 45 சுற்றுலாப் பயணிகளுடன் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்த நீா்மூழ்கிக் கப்பல் திடீரென அளவுக்கு அதிகமான ஆழத்துக்குச் சென்று விபத்துக்குள்ளானது. இதில் ரஷியாவில் இருந்து வந்திருந்த ஆறு சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனா். எஞ்சிய அனைவரும் மீட்கப்பட்டனா். அவா்களில் இருபதுக்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் கூறினா்.

நீா்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. கரையில் இருந்து சுமாா் 1,000 மீட்டா் தொலைவில் இந்த விபத்து நேரிட்டதாக எகிப்துக்கான ரஷிய தூதரகம் தெரிவித்துள்ளது. கப்பலில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவருமே ரஷியா்கள் என்று அந்தத் தூதகரம் கூறியது. ஆனால் அவா்களில் இந்தியா, நாா்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளைச் சோ்ந்தவா்களும் இருந்ததாக எகிப்து அதிகாரிகள் கூறினா்.

அமெரிக்க பொருள்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைத்திடும்: மறைமுகமாக எச்சரிக்கிறாரா டிரம்ப்?

வாஷிங்டன்: இந்தியாவில் அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விரைவில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.ஏப்ரல் 2-ஆம் தேதிமுதல், அமெரிக்க பொருள்களுக்கு எந்தெ... மேலும் பார்க்க

ரவாரம் இரு வேலைநாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை விரைவில் வரும்! -பில் கேட்ஸ்

செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் வாரம் இரு வேலை நாள்கள் மட்டுமே என்கிற நடைமுறை இன்னும் பத்தாண்டுகளில் வழக்கத்தில் இருக்கும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஏஐ தொழில்நுட்ப ... மேலும் பார்க்க

பலியாகப் போகும் 3 லட்சம் பேர்? ஜப்பானுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து!

தீவு நாடான ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் பலியாக வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.அண்டை நாடான மியான்மரில் கடந்த வாரத்தில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் சிலி அதிபர் சந்திப்பு!

ஹைதராபாத்: சிலி நாட்டின் அதிபர் கேப்ரியேல் போரிக் இந்தியாவுக்கு அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். புது தில்லிக்கு விமானம் மூலம் வந்தடைந்த அவரை வெளியுறவு விவகார இணையமைச்சர் பாபித்ரா மார்கெரீட்டா... மேலும் பார்க்க

விண்வெளியில் இருந்து இந்தியா எப்படி தெரிந்தது? சுனிதா வில்லியம்ஸ் பதில்!

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி திரும்பிய பிறகு முதல்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்து சுனிதா வில்லியம்ஸ் பேசியுள்ளார்.சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாள்கள் தங்கியிருந்த இந்திய வம்... மேலும் பார்க்க

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து!

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்துச் சிதறி பயங்கர விபத்து நேரிட்டுள்ளது. எரிவாயு குழாய் வெடித்த இடத்தில் பயங்கர தீப்பிழம்பு வானுயர எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியிருப்பு அருகே எரிவாயு குழாய் ... மேலும் பார்க்க