செய்திகள் :

``எங்களிடம் 130 அணு ஆயுதங்கள் இருக்கு.." - இந்தியாவை நேரடியாக மிரட்டும் பாகிஸ்தான் அமைச்சர்

post image

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து வார்த்தைப் போர் நடந்து வருகிறது.

இந்தியா மத்திய அமைச்சர்கள் பாகிஸ்தானை மிரட்டுவதும், பாகிஸ்தான் இந்தியாவை மிரட்டுவதும் தொடர்ந்து வருகிறது.

தற்போது பாகிஸ்தானின் அமைச்சர் ஹனீப் அப்பாஸி வதும் நடந்து வரும் பதற்றத்தில், ``எங்கள் தளங்களில் நாங்கள் வைத்திருக்கும் ஷாஹீன் (ஏவுகணைகள்), கஸ்னவி (ஏவுகணைகள்) அணு ஆயுதங்களை இந்தியாவுக்காக வைத்திருக்கிறோம். எங்களிடம் உள்ள 130 அணு ஆயுதங்கள் வெறும் ஷோவுக்காக மட்டும் வைத்திருக்கவில்லை.

அமைச்சர் ஹனீப் அப்பாஸி
அமைச்சர் ஹனீப் அப்பாஸி

அந்த ஆயுதங்களை பாகிஸ்தானின் எந்தப் பகுதிகளில் நாங்கள் வைத்திருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியாது. பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பது இந்தியாவுக்குத் தெரியும். அதனால்தான் அவர்கள் பின்வாங்கி தங்கள் நாட்டைத் தாக்கவில்லை. சிந்து நீர் ஒப்பந்தத்தை தடுத்து பாகிஸ்தானின் நீர் விநியோகத்தை நிறுத்த இந்தியா துணிந்தால், முழு அளவிலான போருக்குத் இந்தியா தயாராக வேண்டும்.

முதலில், இந்தியா தன் செயல்களுக்கான பதில்களை கொடுக்க வேண்டும். எங்களை நோக்கி விரல் நீட்டுவதற்கு முன் உங்களை நீங்களே பொறுப்பேற்கச் செய்யுங்கள். இந்தியா முதலில் எங்களை அச்சுறுத்தியது என்று முழு நாட்டிற்கும் முழு உலகிற்கும் நான் சொல்ல விரும்புகிறேன்" என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Doctor Vikatan: பொது இடங்களில் பெரிதாக வெளிப்படும் ஏப்பம்; குணப்படுத்த நிரந்தர தீர்வு உண்டா?

Doctor Vikatan: நான்ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கிறேன். எனக்கு அடிக்கடி ஏப்பம் விடும் வழக்கம் இருக்கிறது. என்ன சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் அது பெரிய சத்தத்துடன் ஏப்பமாகவெளியேறும். இதனால் மா... மேலும் பார்க்க

`மகனுக்கு, BJP தந்த பிரஷர்! கூட்டணிக்கு EPS ஓகே' - Ramasubramanian Interview | Amitshah, Modi | DMK

'டாக்டர் ராமசுப்பிரமணியன்' மிக முக்கியமான அரசியல் விமர்சகர். அ.தி.மு.க ஏன் பா.ஜ.க-வுடன் கூட்டணிக்கு ஒப்புக்கொண்டது, எந்த இடத்தில் எடப்பாடி சிக்கிக்கொண்டார், எதை வைத்து அமித்ஷா கூட்டணி எனும் வலைக்கு கொ... மேலும் பார்க்க

``என் அப்பா 10 மாதங்கள் என்னிடம் பேசவில்லை; ஆனால் அந்த நாளில்..'' -விகடன் மேடையில் நெகிழ்ந்த தமிழிசை

சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக முன்னாள் மாநில தலைவரும், தெலுங்கானா, புதுச்சேரி முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந... மேலும் பார்க்க

``இந்தியா முன்னறிவிப்பு இல்லாமல் ஜீலம் ஆற்றில் நீரை திறந்துவிட்டுள்ளது.." -பாகிஸ்தான் குற்றச்சாட்டு

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 இந்திய சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துவருகிறது. பிரதமர் மோடிஇதற்கிடையே சிந்து நதி ... மேலும் பார்க்க