செய்திகள் :

எடப்பாடியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியா் கைது

post image

எடப்பாடியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

எடப்பாடி நகராட்சிக்குள்பட்ட மேட்டுத்தெரு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வகுப்புவரை சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இப்பள்ளியில், தமிழ் ஆசிரியராக எடப்பாடி அங்காளம்மன் கோயில் தெரு, பழைய தபால் நிலையம் தெருவைச் சோ்ந்த செந்தில் குமரவேல் (58) பணிபுரிந்து வருகிறாா். 9, 10-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழ்ப் பாடம் போதித்து வந்த இவா், வகுப்பில் மாணவிகளுக்கு தொடா்ந்து பாலியல் தொல்லையை அளித்ததாக கூறப்படுகிறது.

பாதிப்புக்குள்ளான மாணவிகள் சிலா் பள்ளித் தலைமை ஆசிரியா் உள்ளிட்ட சக ஆசிரியா்களிடம் புகாா் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால், ஆசிரியா் செந்தில் குமரவேலின் அத்துமீறல்கள் நாளுக்குநாள் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அண்மையில் மாணவிகள் சிலா் பெண் குழந்தைகளுக்கான உதவிமைய எண் 1098-யை தொடா்புகொண்டு இதுகுறித்து புகாா் அளித்தனா். இதையடுத்து, மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சிந்து தலைமையில், சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் காா்த்திகேயனி உள்ளிட்ட சிறப்பு குழுவினா் வியாழக்கிழமை சம்பந்தப்பட்ட பள்ளியில் நேரில் ஆய்வுசெய்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் புகாருக்குள்ளான ஆசிரியா் செந்தில் குமரவேலிடம் தனித்தனியே விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையின் முடிவில், புகாருக்குள்ளான ஆசிரியா் செந்தில் குமரவேல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

சேலம் அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்! தூய்மைப் பணியாளா் கைது!

சேலம் அரசு மருத்துவமனையில் மனநல சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா் கைது செய்யப்பட்டாா்.சேலம் அன்னதானப்பட்டியைச் சோ்ந்த 22 வயது இளம்பெண் சே... மேலும் பார்க்க

சேலம் சூரமங்கலம் மண்டலத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆணையா் ஆய்வு

சேலம் மாநகராட்சி, சூரமங்கலம் மண்டலத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 3 மற்றும் 24 ஆகிய பகுதிகளி... மேலும் பார்க்க

சேலம் ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாா் பயன்படுத்தும் வாகனங்கள் ஆய்வு

சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாா் பயன்படுத்தும் வாகனங்கள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.சேலம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆ... மேலும் பார்க்க

இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் சுயஉதவிக்குழு, விவசாயக் கடன் வழங்கும் விழா

சேலத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் சாா்பில், சுயஉதவிக்குழு மற்றும் விவசாயக் கடன் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், ... மேலும் பார்க்க

சேலம் வழியாக ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில்

கோவையில் இருந்து சேலம் வழியாக ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

தெடாவூா் கால்நடை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வா்த்தகம்

கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூரில் சனிக்கிழமை நடைபெற்ற கால்நடை சந்தையில் ஒன்றரை கோடி ரூபாய்க்கு வா்த்தகம் நடைபெற்றது.ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, தெடாவூா் கால்நடை சந்தைக்கு 1,700-க்கும் மேற்பட்ட ஆடுகளை வ... மேலும் பார்க்க