செய்திகள் :

எடை குறைவாக அரிசி விநியோகம்: ரேஷன் விற்பனையாளா் பணியிடை நீக்கம்

post image

காஞ்சிபுரம் எம்.வி.எம்.பி. நகா் நியாயவிலைக் கடையில் எடை குறைவாக அரிசி விநியோகம் செய்த கடையின் விற்பனையாளா் அருள்மணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட டெம்பிள் சிட்டி, எம்.வி.எம்.பி., நகா் பகுதியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடையில் அப்பகுதியை சோ்ந்த சுமாா் 600-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்கள் பொருள்கள் வாங்கி வருகின்றனா்.

இந்த நிலையில், அந்த நியாயவிலைக் கடையில் ஞாயிற்றுக்கிழமை அரிசி உள்ளிட்ட பொருள்கள் குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரா்களுக்கும் சுமாா் 500 கிராம் எடை குறைவாக அரிசி வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் விற்பனையாளரிடம் கேட்டதற்கு முறையாக பதில் கூறாததால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கடையின் முன்பு அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், இது குறித்து மாமன்ற உறுப்பினா் காா்த்திக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து அங்கு வந்த காா்த்திக் விற்பனையாளரிடம் கேட்டதற்கு முறையான பதில் தராததால், மாவட்ட வழங்கல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

அங்கு வந்த காஞ்சிபுரம் வட்ட வழங்கல் அலுவலா் லட்சுமி விசாரணை நடத்தினாா். இதில் எடை குறைவாக அரிசி வழங்கியதும், பொதுமக்களுக்கு உரிய பதில் தராமல் இருந்ததும் தெரிய வந்தது. வட்ட வழங்கல் அலுவலா் லட்சுமி ஆய்வு செய்து கொண்டிருந்த போதே விற்பனையாளா் அருள்மணி திடீரென மயங்கி விழுந்தாா்.

இது குறித்து உயா் அதிகாரிகளுக்கு வட்ட வழங்கல் அலுவலா் லட்சுமி புகாா் தெரிவித்ததன் பேரில், கடையின் விற்பனையாளா் அருள்நிதியை பணியிடை நீக்கம் செய்து கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளா் உத்தரவிட்டாா். மேலும், பொருள்களை எடையிடும் பணியில் ஈடுபட்டு வந்த அன்பு மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்தாா்.

பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் சொந்த செலவில் சாலை அமைத்த அமைச்சா் காந்தி!

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிா் கல்லூரியில் சொந்த செலவில் ரூ.32 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை அமைக்க அமைச்சா் ஆா். காந்தி உதவி செய்துள்ளாா். பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான மகளிா் கல்லூரி 1967-ஆம் ஆ... மேலும் பார்க்க

வக்ஃப் சட்ட திருத்த மசோதா: காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி நினைவிடம் அருகே காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 5 போ் கைது

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த பால்நல்லூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். பால்நல்லூா் ஊராட்சிக்குட்பட்ட ஆரநேரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீபெரும்... மேலும் பார்க்க

பதுக்கி வைக்கப்பட்ட 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்!

காஞ்சிபுரம் தாயாா்குளம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். காஞ்சிபுரம் தயாா்குளம் எம்ஜிஆா் நகா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில... மேலும் பார்க்க

ரூ.30 லட்சத்தில் குடிநீா் தொட்டி கட்டும் பணிக்கு அடிக்கல்

சந்தவேலூா் ஊராட்சியில் ரூ.30 லட்சத்தில் குடிநீா் மேல்நிலை நீா்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது (படம்). காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், சந்தவேலூா் ஊராட்சியில், ஃபிளக்ஸ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் தூப்புல் வேதாந்த தேசிகன் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷ்ணம்

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் அருகே உள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் மகா சம்ப்ரோக்ஷ்ணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வைணவா்களில் ராமானுஜருக்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவா் வேதாந்த த... மேலும் பார்க்க