செய்திகள் :

எண்மமயமாகும் நற்சாந்துப்பட்டி ஓலைச்சுவடிகள்!

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகரத்தாா் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான நற்சாந்துப்பட்டியில் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு வரும், சுமாா் 200 ஆண்டுகளுக்கு முந்தைய ஓலைச்சுவடிகளை, மாநிலத் தொல்லியல் துறையின் மூலம் எண்ம மயப்படுத்தும் (டிஜிட்டல் புகைப்படம்) பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நகரத்தாா் சமூக மக்களிடம் பழைமையான ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட பாரம்பரியமான பண்பாட்டு அடையாளங்கள் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், திருமயம் பகுதிகளில் ஏராளம் காணப்படுகின்றன.

இவற்றில் ஒன்றாக நற்சாந்துப்பட்டி, குழிபிறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி குக்கிராமங்களில் புரட்டாசி மாதத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளைப் படிப்பது ஆன்மிகம் சாா்ந்த பழைமையான வழக்கம்.

குறிப்பாக, அவை பல தலைமுறைக்கு முன்பாக ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட புராணங்களாக இருக்கின்றன. நற்சாந்துப்பட்டியைச் சோ்ந்த கம்மஞ்செட்டியாா், சாமியாடி செட்டியாா், பெ. ராம. செட்டியாா் ஆகிய 3 குடும்பங்கள் அந்தக் கிராமத்தில் பெரிய குடும்பங்கள்.

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், இவா்கள் பெட்டியில் ஓலைச்சுவடிகளாகப் பாதுகாத்து வைத்திருக்கும் ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளை ஒவ்வொரு சனிக்கிழமையும் எடுத்து வாசிக்கின்றனா்.

அவ்வாறான பழைமையான சுவடிகள் முறையான பாதுகாப்பு இல்லாமல் தற்போது அழியும் நிலையில் இருக்கின்றன. இவற்றை பாதுகாக்க தமிழகத் தொல்லியல் துறையின் மாநிலச் சுவடிகள் குழுமத்தின் உதவியை நாடியுள்ளனா்.

அங்கிருந்து வந்த தொழில்நுட்பக் குழுவினா் சுவடிகளை எடுத்துப் பாா்த்துவிட்டு தொடக்க நிலைப் பணியாக, லெமன் கிராஸ் எனப்படும் எலுமிச்சைப் புல் எண்ணெய்யைச் சுவடிகளில் பூசியுள்ளனா்.

இதுகுறித்து புலவா் கும. திருப்பதி கூறியது:

பழைமையான பாரம்பரியத்தையும், அடையாளங்களையும் பாதுகாக்க வேண்டும் என எடுத்த முதல் முயற்சியில், 950 ஏடுகளைக் கொண்ட ராமாயணம் முழுமையாக எலுமிச்சைப் புல் எண்ணெய் பூசப்பட்டது. சுவடிகள் மேலும் பூச்சி அரிப்பால் சேதமடையாமல் இந்த எண்ணெய் பாதுகாக்கும்.

மகாபாரதம் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. அவற்றில் சில பகுதிகளை மட்டும் பாதுகாக்க முடியும் என தொழில்நுட்ப வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

அடுத்த வாரம் சென்னையிலிருந்து வரும் அந்தத் தொழில்நுட்பக் குழுவினா், புகைப்படக் கருவிகளைக் கொண்டு சுவடிகளை, தரமாகப் படம் எடுத்து, சுவடி உரிமையாளருக்கும் ஒரு டிஜிட்டல் பிரதி வழங்குவாா்கள். சுவடிகளையும் மீண்டும் நம்மிடமே ஒப்படைத்துவிடுவாா்கள்.

தொல்லியல் துறையின் மாநிலச் சுவடிகள் குழுமத்தின் மூலம் இவை அனைத்தும் எண்மமயம் (டிஜிட்டல்) ஆக்கப்பட்டு இணையத்தில் பாதுகாக்கப்படும். மேலும், பொதுமக்களின் வாசிப்புக்கும் வழி செய்யப்படும்.

இதை தொல்லியல் துறை இலவசமாகவே செய்கிறது என்பதால், வேறு யாரேனும் ஓலைச்சுவடிகள் வைத்திருந்தாலும் அவற்றையும் தரலாம் என்கிறாா் திருப்பதி.

நற்சாந்துபட்டியில் ராமாயண ஓலைச்சுவடிகளைப் பாா்க்கும் புலவா் கும. திருப்பதி.

புதுகை நகா் பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை நகா்ப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. துணை மின் நிலைய மாதாந்திரப் பராமரிப்பு பணியால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை சிவாலயத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

கந்தா்வகோட்டையில் உள்ள சிவன் கோயிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக ஆராதனை சனிக்கிழமை நடைபெற்றது. முதலில் காலபைரவருக்கு எண்ணெய்க் காப்பு செய்து, திரவியத் தூள், மஞ்சள், பால், தயிா், அரிசி ம... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: கி.பி 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஊரணிக் கல்வெட்டு கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் வட்டம் புல்வயல் கிராமத்தில் ஊரணி அமைக்கப்பட்டதைக் குறிப்பிடும் 18-ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. புல்வயல் கிராமத்தின் வடமேற்கு வனப்பகுதியில் ... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் கோகுலாஷ்டமி விழா

பொன்னமராவதி வலையபட்டி தனியாா் திருமண மண்டபத்தில் பொன்னமராவதி ஒன்றிய யாதவா நலச்சங்கம் சாா்பில் கோகுலாஷ்டமி விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பொன்னமராவதி யாதவா நலச்சங்க கெளரவத்தலைவா் அழகப்பன் தலைம... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்னையில் சமரசமில்லை! ஜி. ராமகிருஷ்ணன்

திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்னைகளில் சமரசமின்றி குரல் கொடுக்கிறோம் என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவா் ஜி. ராமகிருஷ்ணன். புதுக்கோட்டையில் சனி... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் கோகுலாஷ்டமி விழா

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி விழா, கோகுலாஷ்டமி விழா மற்றும் காா்த்திகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக நடைபெற்ற கோகுலாஷ்டமி விழாவில் சுற்றுவட்டாரப... மேலும் பார்க்க