செய்திகள் :

’எதிரிகளால் பேரிழப்பு’: உலக வங்கியிடம் கூடுதல் கடன் கோரிய பாகிஸ்தான்!

post image

உலக வங்கியிடம் பாகிஸ்தான் அரசு கூடுதல் கடன் கோரியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக வியாழக்கிழமை இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை ரஷிய தயாரிப்பான ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு சர்வ சாதாரணமாக இந்தியா முறியடித்தது.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள லாகூர், இஸ்லாமாபாத், கராச்சி, சியால்கோட், பஹவல்பூர், பெஷாவர், குவெட்டா உள்ளிட்டப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த நிலையில், உலக வங்கியிடம் கூடுதல் கடன் விடுக்கக் கோரி பாகிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தானின் பொருளாதார விவகாரப் பிரிவு உலக வங்கியை டேக் செய்து வெளியிட்ட பதிவில்,

“எதிரிகளால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதால், சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடனை பாகிஸ்தான் கோருகிறது. அதிகரித்து வரும் போர் மற்றும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு மத்தியில், சர்வதேச கூட்டாளிகள் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ‘ட்ரோன்’ தாக்குதல் லாகூரில் 4 வீரா்கள் காயம்: பாகிஸ்தான் தகவல்

லாகூரில் இந்தியா நடத்திய ‘ட்ரோன்’ (ஆளில்லாத சிறிய ரக விமானங்கள்) தாக்குதலில் 4 ராணுவ வீரா்கள் காயமடைந்ததாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்தியா ஏவிய அனைத்து டிரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன என்றும் அறிவிக... மேலும் பார்க்க

சொந்த போா் நிறுத்தத்தையே 734 முறை மீறியது ரஷியா

இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ன் நினைவு தினத்தை முன்னிட்டு ரஷியா தாமாக முன்வந்து அறிவித்த போா் நிறுத்தத்தையே அது 734 முறை மீறியதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் உக்ரைன்... மேலும் பார்க்க

கனிம ஒப்பந்தம்: உறுதி செய்தது நாடாளுமன்றம்

உக்ரைனின் கனிம வங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்காக அந்த நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கு உக்ரைன் நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.உக்ரைன் மீது ரஷியா க... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம்

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மற்றும் அதைத் தொடா்ந்து இருநாட்டு எல்லையில் நிலவும் மோதல் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விவ... மேலும் பார்க்க

இஸ்தான்புல் மேயரின் எக்ஸ் கணக்கு முடக்கம்

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள துருக்கியின் முக்கிய எதிா்க்கட்சித் தலைவரும் அந்த நாட்டின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயருமான எக்ரீம் இமாமோக்லுவின் எக்ஸ் ஊடகக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. த... மேலும் பார்க்க

நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: அமெரிக்கா

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான மோதலால் ஏற்பட்டுள்ள சூழலை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நியூயாா்க்கில் செய்தியாளா்களைச் சந்தித்த அமெரிக்க ராணுவத்தின் பசிபிக் பிராந்தியத்துக்கான க... மேலும் பார்க்க