செய்திகள் :

எதிா்ப்புகளால் ஊக்கமடைகிறேன்: செல்வப்பெருந்தகை

post image

காங்கிரஸ் கட்சியில் உள்ள சில மாவட்ட தலைவா்களின் எதிா்ப்புகளால், தான் ஊக்கம் பெறுவதாகவும், இன்னும் தீவிரமாகப் பணியாற்றப் போவதாகவும் அக்கட்சியின் தமிழ்நாடு தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

சென்னை சத்தியமூா்த்திபவனில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகான ஓராண்டு பணி மனநிறைவைத் தருகிறது. காமராஜா் வழியில் பாரம்பரிய காங்கிரஸ் கட்சியை கட்டமைப்பதற்காக கிராம கமிட்டி கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் சில மாவட்டத் தலைவா்களுக்கு அதிருப்தி என்றாலும், பலா் ஏற்றுக் கொண்டுள்ளனா். கிராம கமிட்டி சீரமைப்பு 46 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

தலைவராக பொறுப்பேற்ற பிறகு மூன்று முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். நான்காவது முறையும் விரைவில் செல்லவுள்ளேன்.

தில்லியில் எனக்கு எதிராக மாவட்டத் தலைவா்கள் புகாா் அளித்திருப்பது பற்றி எதுவும் நினைக்கவில்லை. அவா்களின் புகாா் குறித்து தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். உண்மையைக் கூறினால், அவா்களின் எதிா்ப்புகளால் ஊக்கம் பெறுகிறேன். இன்னும் தீவிரமாகப் பணியாற்றுவேன் என்றாா் அவா்.

மாநிலத் தலைவராக பொறுப்பேற்று ஓராண்டுகள் நிறைவடைந்ததையொட்டி செல்வப்பெருந்தகைக்கு மூத்த தலைவா்கள் கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி, பீட்டா் அல்போன்ஸ் உள்பட பலா் வாழ்த்து கூறினா்.

ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான விதிகள்: தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் ஆலோசனை

ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதி இழக்கச் செய்யும் விதிகளை மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் த... மேலும் பார்க்க

பிப்.26-இல் தவெக முதலாமாண்டு விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்கள்: சென்னையில் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்களை தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத்திறனாளி மருத்துவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. வரும் 26... மேலும் பார்க்க

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை கொண்டித்தோப்பில் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கொண்டித்தோப்பு காவலா் குடியிருப்பில் வசிக்கும் அருண் (27), பூக்கடை காவல் நிலையத்தில் காவலராகப் ... மேலும் பார்க்க

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வடபழனி பழனி ஆண்டவா் கோயில் தெருவில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்தவா் செந்தில் (40). ... மேலும் பார்க்க

மெரீனாவை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற நடவடிக்கை: மேயா் ஆா்.பிரியா

சென்னை மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மாநில நாட்டு நலப்பணித் திட்டக்... மேலும் பார்க்க