செய்திகள் :

`எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை!' - அதிமுக, பாஜக கூட்டணி கேள்விக்கு அண்ணாமலை பதில்

post image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாள்களுக்கு முன்பு திடீரென டெல்லிக்கு விசிட் அடித்து, பாஜக-வைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்திலேயே நேரில் சந்தித்து, 45 நிமிடங்கள் உரையாடினார். அப்போது, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி அமைக்கப் போகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் உலாவின.

அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி

இருப்பினும், அமித் ஷாவுடனான சந்திப்புக்குப் பின்னர் டெல்லியிலேயே செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ``கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க மக்கள் பிரச்னைக்காகத்தான் இங்கு வந்திருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது" என்று கூறியிருந்தார். இத்தகைய சூழலில், எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லிக்குச் சென்று, அமித் ஷாவை நேரில் சந்தித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, அதிமுக - பாஜக கூட்டணி அமையப் போகிறது என்று பரவிவரும் பேச்சுகள் குறித்து, ``கூட்டணிக்கான தூரம் நிறைய இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. களத்தில் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. கட்சியின் நலன் முக்கியம். அதைவிட தமிழக மக்களின் நலன் முக்கியம். கூட்டணி சம்பந்தமாகத் தகுந்த நேரத்தில் தலைவர்கள் பேசுவார்கள்.

அண்ணாமலை
அண்ணாமலை

மாநில தலைவராக என்ன சொல்ல வேண்டுமோ அதைத் தலைவர்களிடத்தில் தெரிவித்திருக்கிறேன். 2026-ல் ஆட்சியிலிருந்து தி.மு.க இறக்கப்பட்ட வேண்டும். எனவே, இப்போதைக்கு கூட்டணியைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. எந்தக் கட்சியாக இருந்தாலும், கூட்டணியைப் பற்றி பேச வேண்டிய நேரத்தில் பேசுவோம். எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. கட்சிதான் முதன்மையானது." என்று கூறினார்.

"இந்தியாவிலுள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன்" - பிரதமர் மோடி

பிரதமர் மோடி 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றிருக்கிறார். இந்நிலையில் இன்று பிரதமர் மோடி மற்றும் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க முன்னிலையில் இந்தியா- இலங்கை நாடுகளுக்கிடையேயான சில முக்கிய... மேலும் பார்க்க

'மீனவர்கள் பிரச்னைக்கு மோடி தீர்வு காண வேண்டும்' - தொல்.திருமாவளவன்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், காட்டத்தூரில் உள்ள பள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாள... மேலும் பார்க்க

'நாங்க மட்டும் சும்மாவா?' அமெரிக்கா மீது வரி விதித்த சீனா; 'பயந்துவிட்டனர்' எச்சரிக்கும் ட்ரம்ப்!

'ட்ரம்ப்பின் பரஸ்பர வரி' - இது தான் பொருளாதார உலகின் தற்போதைய‌ ஹாட் டாப்பிக்.அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பரஸ்பர வரி குறித்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமைதி காத்திருந்தாலும், சீனா ட்ரம்ப்பின் வரி கொள்க... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் பயணம் : யாத்திரை, சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடு என்ன? | முழு தகவல்

ஆங்கிலேயர் காலத்தில் நாட்டின் நிலப்பரப்பை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்க கட்டப்பட்டது பாம்பன் ரயில் பாலம். 111 ஆண்டுகளை கடந்த பாலம் கடல் அரிப்பின் காரணமாக வலு இழந்தது. இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட... மேலும் பார்க்க