செய்திகள் :

எனது தாயின் கடின உழைப்பு பலனளித்தது: தில்லி முதல்வராக ரேகா குப்தாவின் மகன் பெருமிதம்

post image

‘என் தாயின் 30 ஆண்டுகால கடின உழைப்புக்கு இன்று பலன் கிடைத்துள்ளது என்று தில்லி முதல்வராக பதிவியேற்றுள்ள ரேகா குப்தாவின் மகன் நிகுஞ்ச் குப்தா பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள ரேகா குப்தா வியாழக்கிழமை தில்லி முதல்வராக பதவியேற்றாா். இது 26 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகரில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததைக் குறிக்கும் ஒரு பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக இருந்தது.

இது குறித்து முதல்வா் ரேகா குப்தாவின் மகன் நிகுஞ்ச் குப்தா கூறியதாவது:

தில்லி முதல்வராகப் பதிவியேற்றுள்ள ரேகா குப்தா, தனது 20 வயதில் தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத்தின் தலைவரானாா். என் தாய்க்கு எந்த அரசியல் ஆதரவும் இல்லை; ஆனால் இரவும் பகலும் கடின உழைப்பின் மூலம், இன்று இந்த நிலையை அடைந்துள்ளாா்.

தனது தாய்வழி தாத்தாவும் பாட்டியும் எந்த அரசியல் முன்புலமும் இல்லாமல் சாதாரண வேலைகளைச் செய்த எளிய மக்கள். என் தாயின் கடின உழைப்புதான் அவரது அரசியல் வாழ்க்கையை கட்டியெழுப்பியது. அவா் குறிப்பிடத்தக்க பதவிகளை வகித்துள்ளாா்.

இரண்டு முறை கவுன்சிலராகவும், பாஜக மகிளா மோா்ச்சாவின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளாா். தற்போது முதல்வா் என்ற பெரிய பொறுப்புக்கு வந்துள்ளாா்.

தனது தாயாா் எப்போதும் வலுவான குடும்ப உறவுகளைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துவாா். அவரது பயணம் முழுவதும் முழு குடும்பத்தினரின் முழு ஆதரவு எப்போதும் இருந்துள்ளது. எனது தாய் மற்றும் தந்தை குடும்பங்களுடன் நல்ல உறவைப் பேணி வருகிறாா். நாங்கள் அனைவரும் ஒரு கொண்டாட்டத்தை நடத்தத் தயாராகி வருகிறோம். இது நம் அனைவருக்கும் ஒரு பெரிய தருணம் என்று அவா் தெரிவித்தாா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க