செய்திகள் :

என்னடா இவரு நம்மளை கண்டுக்கவே இல்லை என்று தோன்றும்! - அப்பாவுக்கு ஒரு மகனின் மடல் | #உறவின்கடிதம்

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

அன்புள்ள அப்பா,


என்னுடைய பதின் பருவம் தொடங்கும் வரையில் நம் நன்றாக பேசியதாக நினைவு, அதன்பிறகு என்னுடைய வயது நம் தூரத்தை அதிகரித்ததா, இல்லை நான் கல்லூரி படிப்பு , பிறகு வேலை நிமித்தமாக சென்னை வந்தது தூரத்தை அதிகரித்ததா தெரியவில்லை. ஆனால் யோசித்துப் பார்த்தால், அறிவியல் முன்னேறி செல்போன் எல்லாம் வந்துவிட்டது. அதனால் இவைகளை சாக்கு சொல்லி தப்பிக்கவும் எனக்கு வழி இல்லை.

சித்தரிப்புப் படம்

முரண்பாடாகவே  மாறிவிட்டோம் நாம். எதைப்பற்றிப் பேச ஆரம்பித்தாலும் நம்மிடையே ஏதாவது முரண் கிளம்புகிறது. வார்த்தைகளில் முரண், மனதிலும் முரண்… நம்மிடையே எங்கும், எப்போதும் முரண்பாடே. சாமி குமிடுவது முதல் வீட்டுக்குச் சாக்கு பை வாங்கும் வரை பல முரண்பாடுகள் இருக்கின்றன நம்முள்!— கொள்கைகளிலும் முரண், நம்பிக்கைகளிலும் முரண், அரசியலில் முரண், உணவு பழக்கத்தில் முரண், பிறரிடம் பழகுவதிலும் முரண்… அனைத்திலும் முரண் உள்ளது.

ஆனால் என்ன செய்வது? அனைத்தும் முரணாக இருந்தாலும், நான் சில அடிப்படை விஷயங்களில் உன்னைப் போலவே இருக்கிறேன்.

நன்றாக படிப்பது எனக்கு இயல்பாக அமைந்த ஒன்று. ஆரம்ப காலத்தில் பள்ளியில் நான் நன்றாக படிக்கத் தொடங்கிய போது, நம் வீட்டிற்குப் பெருமை உண்டாயிருந்தது. உங்கள்து நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் சொன்னது, “சுப்பு புள்ளை ஆசே, நல்லாதா படிக்கறான், அவன மாதிரி இரு” என்று.

பள்ளியில் மீசை வர ஆரம்பித்த போது, பயந்து ஓடி வந்து, “அப்பா  மூக்குக்கு கீழே எனக்கு என்னமோ வருது  என்று பயந்து ஓடி வந்தேன். 'டேய், அது மீசை தான்' என்று சொல்லி பிறகு என் முதல் ஷேவை நீங்கள் செய்தீர்கள்..

 நினைவிருக்கிறது…

 பொது தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற போது, நம் உறவினர்கள் அனைவரும் முதல் வார்த்தையாகச் சொன்னது,

“சுப்பு புள்ளை ஆச்சே, அவன மாதிரி நல்ல மதிப்பெண் வாங்குறான்” என்று.

சித்தரிப்புப் படம்

நான் உங்களைப் போல மருத்துவப் படிப்பை தேர்வு செய்து, மருத்துவர் ஆவேன் என்று அனைவரும் நினைத்த போது,  எனக்கு அதில் பெரிய நாட்டம் இல்லை என்று கூறினேன். நீங்கள் சற்றும் யோசிக்காமல், “எனக்கு நீ சொல்ற எஞ்சினியரிங் பற்றி தெரியலை, நீ மெடிசின் எடுத்தா, நீ வாழ்க்கைல தடுக்கி விழுந்தாலும் நான் பாத்துக்குவேன்”ன்னு சொன்னீங்க, நான் சிரிச்சுட்டு ‘பரவால பா, என்று சிரிச்சுட்டு எஞ்சினியரிங் எடுத்தேன்.

மகன் தடுக்கி விழக் கூடாது என்று தந்தையாய் நீங்க நினைத்தாலும், அவன் கீழே விழுந்து சொந்த காலில் நின்று பயணப்பட போகிறேன் என்பதை உணர்ந்து, என்னை கோயம்புத்தூரில் கல்லூரி படிப்பை மேற்கொள்ள வழி அனுப்பி வைத்தீர்கள். பின்னர், சென்னை யில் வேலை கிடைத்த போது, நீங்கள் சொன்ன வார்த்தைகள்:

“எப்படியோ டா, நீயா ரோட்டில் அலஞ்சு திருஞ்சு வேலை வாங்கிட்ட, பாத்து பாத்திரமா இரு” என்று. உங்கள் வார்த்தைகளில், மகன்  சுயமாக முயன்றும எவ்வித சிபாரிசுகளும் இல்லாமல் வேலை வாங்கிவிட்டான் என்ற பெருமை தெரிந்தது.

சித்தரிப்புப் படம்

பின்னர் வேலைக்கு சேர்ந்த பிறகு அலுவலகத்தில் வளைந்து கொடுத்து, அலுவலக சூழலில் இருப்பது சிலர் செய்யக்கூடியதே.

ஆனால் நானோ அதை செய்யாமல் கேள்வி கேட்டு கொண்டிருந்தேன். பின்னர் தான் உணர்ந்தேன் அது உங்களிடமிருந்து வந்தது. அரசு வேலையில் இருந்தாலும் லஞ்சம் எதுவும் வாங்காமல் நேர்மையான முறையிலேயே இருந்தீர்கள், இன்னும் இருக்கிறீர்கள்; அவை என்னையும் தொற்றி கொண்டது போல.

அனைவரும் ஆசை என்ற பெயரில், தேவையில்லாத விஷயங்களை EMI மற்றும் கிரெடிட் கார்டு மூலம் வாங்கி குவித்துப்போதும் எனக்கு ஒருபோதும் அப்படிச் செய்ய தோனியதில்லை.நாம் சம்பளத்திற்குள் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்ற தின்னிய எண்ணம் எனக்கு, சரியான யோசித்து அதுவும் உங்களிடம் இருந்து வந்ததுதான்.

சற்று யோசித்தால் அதுவும் உங்களிடம் இருந்து வந்ததுதான், ஒருமுறை கூட நீங்கள் யாரிடமும் கடன் வாங்கியதில்லை, மற்றவர் பொருளுக்கு ஆசைப் படவில்லை. இன்றும் என் செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன், அதுவும் உங்களிடம் இருந்து வந்தது. தாத்தாவை சார்ந்து நீங்கள் இருந்தவர் இல்லை, அவரை தொந்தரவு செய்யாமல் உங்கள் சம்பளத்தில் நாம் வாழ்ந்தோம், அதுவும் என்னை தொற்றி கொண்டது.

சினிமாவில் வருவது போல நீங்கள் உட்காரவைத்து எனக்கு அறிவுரை கூறியதில்லை தான், ஆனாலும் நீங்கள் செய்தவற்றை தான் பின்தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.தலையில் எண்ணெய் தேய்க்க ஆரம்பித்தது முதல் வாழ்க்கையில் நேர்மையாக இருப்பது வரை அனைத்துக்கும் ஆரம்ப புள்ளி நீங்களே.  எந்த ஒரு தந்தையர் தினத்திற்கும் நான் வாழ்த்து கூறியதில்லை.

உங்களின் பிறந்த நாளன்று வாழ்த்து தெரிவிக்கும் கடைசி நபர் நான்தான். இப்படி நமக்குள் ஏற்பட்ட இடைவெளை மிகவும் அதிகம். கடவுள் நம்மிடையே பெரிய முரண் தான் ஆன்மீகத்தில் அதீத இடுபாடு கொண்டவர் நீங்கள். நானோ நேர்மறை எண்ணம் கொண்டவன். இருப்பினும் அதை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. என் நம்பிக்கையில், நீங்கள் நடுவில் வந்ததே இல்லை.

சித்தரிப்புப் படம்

சமூகத்தில் நடக்கும் அவலங்களை கண்டு கோபம் வரும்போதும் சரி, அலுவலகத்தில் சிலர் சிலருக்கு காட்டும் கடுமையான பாகுபாட்டைப் பார்த்து எனக்குள் எழும் கோபமும் சரி, உங்களை நினைவுகூருவதாக அம்மா இன்றும் கூறுவது உண்டு. ‘அப்படியே அப்பன் புத்தி’ என்று அம்மா என்னை கூறுவது, நீங்கள் தினமும் நம் வீட்டுப் பூஜை அறையில் சொல்லும் மந்திரம் போல எனக்குள் ஒளிந்து கொண்டு இருக்கிறது.

நேர்மையாக இருப்பது அனைவரும் பின்பற்ற வேண்டியது. ஆதலால், அப்படி இன்னும் நேர்மையாக இருப்பதற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள் கூறுவது சிறுப்பிள்ளைத்தனம் என்றாலும் இன்றைய உலக சூழலிலும் அப்படியே இருப்பதே கடினமே. நீங்கள் அப்படியே இருந்து என்னையும் அதே வழியில் உண்மையுடன் நடத்தியதற்கு நன்றி.

சித்தரிப்புப் படம்

நான் ஒவ்வொரு தடவையும் சென்னை இருந்து சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் வீட்டிற்கு வரும்போது, என்னடா இவரு நம்மளை கண்டுக்கவே இல்லை என்று தோன்றுவது உண்டு. ஆனால் ஒரு முறை வேலை காரணமாக வெளிநாடு சென்றிருந்தபோது, ஒரு நேரம் சாப்பாடு கிடைக்காமல் இருந்தேன்.

அந்த நேரத்தில், அம்மாவிடம் நீங்கள் மீண்டும் மீண்டும், ‘அவன் சாப்பிட்டானா இல்லையா? என்ன பண்ணறான்? சாப்பிட்டானா? சாப்பிட்டானா?’ என்று கேட்டது என் மனதில் நன்றாக பதிந்திருந்தது. நீங்கள் அப்படி அக்கறையுடன் பேசுவதை நான் உணரவேண்டும் என்பதற்காகவே அந்தநேரம் சாப்பாடு இல்லாமல் இருக்க நேர்ந்தது போலவே இப்போது எனக்கு தோன்றுகிறது.

ஸ்கூலில் படிக்கும்போது ராங்க் கார்டு வாங்க எப்போதாவது தான் வருவீர்கள் நீங்க. ஆனா அப்போதும், 'ஹரி ஓட அப்பா'னு சொல்வாங்க. உங்கள் முகத்தில் ஒரு லேசான சிரிப்பு தெரியும். ஆனா இப்போ தான் அந்த விஷயங்களின் உண்மை அர்த்தம் தெரியுது. ஆனா இப்போ இன்னொரு விஷயம் தெரியுமா?

ஒரு போதும் வெளிநாடு செல்லாத, பாஸ்போர்ட்டை நம் வீட்டு அலமாரியில் வைத்து பாதுகாக்கும் உங்களின் பெயரிலேயே இமிகிரேஷனில் மக்கள் என்னை கூப்பிடுவார்கள், ஏர் ஹோஸ்டஸும் என்னை உங்கள் பெயரால் தான் கூப்பிடுவார்.

 “HARIHARANSHANKAR SANKARASUBRAMANIAN” passport-ல இப்படித்தான் இருக்கு. இதில் “சங்கர சுப்பிரமணியன்” உங்க பெயர் தான். ஒவ்வொரு முறையும் 'சங்கர சுப்பிரமணியன்' என்று தான் என்னை கூப்பிடுகிறார்கள்.

நம்மதான் பெருசா பேசிக்கரது இல்லையே அதான் இத சொல்ல விட்டுட்டேன். இப்போ சொல்றேன்.

சங்கர சுப்பிரமணியன்!

My Vikatan-இல் உங்களது உணர்வுப்பூர்வமான `கடிதம்'

`ஒரு கடிதம் எழுதினேன்’

`ஒரு கடிதம் எழுதினேன்!’

My Vikatan: `பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களுக்கும் எழுதும் நெகிழ்வான கடிதம்!’

தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கடிதங்கள் விகடன் தளத்தில் வெளியாவதுடன், அதனை எழுதியவர்கள், `இயக்குநர் ராம்’ உடன் இணைந்து அவர் இயக்கியுள்ள ‘பறந்து போ’படத்தின் சிறப்பு காட்சியை பார்க்கும் வாய்ப்பு!

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஜூன் 26, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாத ஒன்றை நீ எனக்கு செய்தாய்! - அப்பாவின் மடல் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

நான் மாறியதற்கான காரணத்தை காலம் உனக்குப் புரிய வைக்கும்! - மகளுக்கு ஒரு கடிதம் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானியும் எழுத்தாளருமான நெல்லை சு.முத்து காலமானார்

அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு என 70-க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ள விஞ்ஞானி நெல்லை சு.முத்து திருவனந்தபுரத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். 1951-ம் ஆண்டு மே 10-ம் தேதி நெல்லையைச் சேர்ந... மேலும் பார்க்க

மிளிர் கல் : கண்ணகியின் வழித்தடத்தில் ஒரு பயணம் - அட்டகாச கதை

பூம்புகார் தொடங்கி இடுக்கியில் அமைந்துள்ள மங்களா தேவி கண்ணகி கோயில் வரை கண்ணகியின் வழித்தடத்தில் ஒரு பயணம் சென்றால் எப்படி இருக்கும்? அந்தப் பயணம் தான் மிளிர் கல் நாவல். புறநானூறு காலம்புறநானூறு உள்ளி... மேலும் பார்க்க