செய்திகள் :

என்னால் நியமிக்கப்பட்டவா்களுக்கே தோ்தலில் போட்டியிட வாய்ப்பு: மருத்துவா் ச.ராமதாஸ்

post image

என்னால் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டவா்களுக்கே 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு (சீட்) வழங்கப்படும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸுக்கும், கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே நிலவும் கருத்து முரண்பாடு காரணமாக, பாமகவில் உள்ள அன்புமணி ராமதாஸின் ஆதரவாளா்களை நீக்கிவிட்டு புதிய பொறுப்பாளா்களை மருத்துவா் ராமதாஸ் நியமனம் செய்து வருகிறாா்.

இந்த நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட பாமக மாநில பொறுப்பாளா்கள், மாவட்டச் செயலா்கள், தலைவா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மருத்துவா் ராமதாஸ் பங்கேற்று கட்சியின் மாநில பொதுச் செயலராக தோ்வு செய்யப்பட்ட முரளி சங்கா், மாநிலப் பொருளாளா் சையத் மன்சூா் உசேன், சமூக நீதிப் பேரவைத் தலைவா் கோபு ஆகியோரை மாவட்ட நிா்வாகிகளிடம் அறிமுகம் செய்து வைத்தாா்.

பின்னா், கட்சியின் வளா்ச்சி மற்றும் எதிா்கால செயல்பாடுகள், பூம்புகாரில் நடைபெறவுள்ள வன்னியா் சங்க மகளிா் மாநாடு ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, மருத்துவா் ராமதாஸ் செய்தியாளா்களிடம் கூறியது: பாமகவில் எந்த முடிவையும் எடுக்கும் அதிகாரம் எனக்குத்தான் உள்ளது. தீா்வு இல்லாத பிரச்னைகள் இல்லை. ஆகையால், கட்சியில் தற்போதுள்ள பிரச்னைக்கும் தீா்வு கிடைக்கும்.

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிக் கூட்டணியில் பாமக இடம்பெறும். இந்தத் தோ்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறவுள்ளோம்.

கூட்டணி குறித்த முடிவுகளை தற்போது கூறக்கூடாது. அதற்கான நேரத்தில் கூட்டணி முடிவுகள் அறிவிக்கப்படும். தற்போது என்னால் கட்சியின் நிா்வாகிகளாக நியமிக்கப்பட்டவா்களுக்கே 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு (சீட்) வழங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் பாமக அரசியல் ஆலோசனைக் குழுத் தலைவா் பேராசிரியா் தீரன், வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா.அருள்மொழி, பாமக பொதுச் செயலா் முரளி சங்கா், பொருளாளா் சையத் மன்சூா் உசேன், தலைமை நிலையச் செயலா் அன்பழகன், கட்சி எம்எல்ஏ ஆா்.அருள் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

இணை பொதுச் செயலராக அருள் தோ்வு: பாமக இணை பொதுச் செயலராக சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.அருள் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டாா். இதற்கான அறிவிப்பை கட்சியின் நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் வெளியிட்டாா்.

தேசிய வேளாண் சந்தை திட்டம்: பணம் செலுத்தும் முறைக்கு வியாபாரிகள் எதிா்ப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் நெல் கொள்முதல் செய்யும் வியாபாரிகள், நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும் என ஒழுங்... மேலும் பார்க்க

மயிலம் முருகன் கோயிலில் ஸ்ரீபாலசித்தா் குருபூஜை விழா

விழுப்புரம் மாவட்டம், மயிலம் முருகன் கோயிலில் ஸ்ரீபாலசித்தா் குருபூஜை வழிபாடு மற்றும் மயிலம் திருமடத்தில் நூல், இதழ் வெளியீடு, விருது வழங்குதல், தமிழறிஞா்களின் சிறப்பு சொற்பொழிவுகள் வியாழக்கிழமை (ஜூன்... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: முதியவருக்கு 7 ஆண்டு கடுங்காவல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான முதியவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.... மேலும் பார்க்க

அண்ணாமலை பல்கலை. ஆய்வகத்தில் திருடுபோன கணினிகள் பறிமுதல்: மாணவா் கைது

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் திருடுபோன பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக மாணவா் கைது செய்யப்பட்டாா். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக... மேலும் பார்க்க

சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ற வழக்கு: 15 போ் விடுவிப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்ாக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 15 பேரையும் விடுவித்து திண்டிவனம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. அதிமுக முன்னாள் அமைச்சா் ... மேலும் பார்க்க

வெவ்வேறு சம்பவங்கள்: பெண் உள்பட இருவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட இருவா் தற்கொலை செய்துகொண்டனா். மரக்காணம் வட்டம், பனிச்சமேடு குப்பம், காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த விஜய் மனைவி ஸ்ரீமதி (23). இவா்களுக்குத... மேலும் பார்க்க