செய்திகள் :

என்னுடன் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கத் தயாரா? - மோடிக்கு மமதா கேள்வி

post image

தன்னுடன் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கத் தயாரா? என பிரதமர் மோடிக்கு மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சவால் விட்டுள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் அலிபர்துவார் பகுதியில் எரிவாயு திட்டத்தைத் தொடக்கிவைத்த பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பேசுகையில், "மேற்குவங்கத்தில் சமீபத்தில் நடைபெற்ற முர்ஷிதாபாத், மால்டா வன்முறைகள் மாநில அரசின் அராஜகம். இங்கு பெண்களுக்கு பாதுகாப்பின்மை, வேலைவாய்ப்பின்மை என பல பிரச்னைகள் உள்ளன. அதனால் 'ஆபரேஷன் பெங்கால்' மேற்கொள்வோம்" என்று மேற்குவங்க அரசை கடுமையாக சாடினார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் மம்தா பானர்ஜி, 'இதுகுறித்து என்னுடன் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்க வாருங்கள், நீங்கள் உங்கள் டெலிப்ராம்ப்டரைக் கொண்டு வரலாம்' என்று பிரதமர் மோடிக்கு சவால் விட்டுள்ளார். மேலும் தைரியம் இருந்தால் மாநிலத்தில் முன்கூட்டியே தேர்தலை நடத்துங்கள் என்றும் கூறியுள்ளார்.

"தேச நலனைப் பாதுகாக்க ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று விளக்கமளித்து வரும் நிலையில், மத்திய அரசு 'அரசியல் ஹோலி' விளையாடிக் கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடி இன்று பேசியது அதிர்ச்சியை மட்டும் ஏற்படுத்தவில்லை. கேட்பதற்கே துரதிர்ஷ்டவசமாக இருக்கிறது. ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து 'ஆபரேஷன் பெங்கால்' மேற்கொள்வோம் என்று பிரதமர் மோடி எப்படி கூறலாம்?. அப்படி பேச வேண்டிய நேரம் இதுதானா? இப்படி பேசுபவர் பிரதமராக இருக்கத் தகுதியில்லை. பிரதமர் மோடி பொய்களையே கூறுகிறார். நாட்டை கொள்ளையடிக்கிறார்.

இவ்வாறு பேசியதன் மூலம் மேற்குவங்கத்தை பிரதமர் மோடி அவமதித்துள்ளார். மாநில மக்களை அவமதித்துள்ளார். அப்படியெனில் நாளைக்கே மேற்குவங்கத்தில் தேர்தலை நடத்துங்கள். நாங்கள் தயாராக இருக்கிறோம். உங்கள் சவாலை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆபரேஷன் சிந்தூர் குறித்து நான் கருத்து தெரிவிக்கமாட்டேன் ஆனால் ஒவ்வொரு பெண்ணும் மதிக்கப்பட வேண்டும், அதை மறந்துவிடாதீர்கள். அரசியல் லாபத்திற்காகவே மத்திய அரசு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரை தேர்வு செய்துள்ளது.

உலக நாடுகளுக்குச் சென்ற எம்.பி.க்கள் குழுவில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி ஒருவராக இருக்கும் நிலையில் பிரதமர் எதிர்க்கட்சியையும் மாநில அரசுகளையும் குறை கூறுவதில் மும்முரமாக இருக்கிறார்" என்று பேசியுள்ளார்.

இதையும் படிக்க | விரைவில் இந்தியாவுடன் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இணையும்: ராஜ்நாத் சிங்

காங்கோவில் ஐ.நா.அமைதிப்படை பணி: 160 போ் கொண்ட பிஎஸ்எஃப் படை அனுப்பிவைப்பு

புது தில்லி: காங்கோவில் ஐ.நா. அமைதிப்படை பணிகளில் ஈடுபட 160 போ் கொண்ட எல்லை பாதுகாப்புப் படையை (பிஎஸ்எஃப்) இந்தியா திங்கள்கிழமை அனுப்பிவைத்தது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்நாட்டு குழப்பங்கள் நிலவி... மேலும் பார்க்க

வெள்ளத்தில் மிதக்கும் வடகிழக்கு மாநிலங்கள்: 30 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், திரிபுரா ஆகியவை கடுமையான கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. சிக்கிமில்இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்றுராணுவ வீரர்கள் பலியானது உள்பட, பருவமழையால்... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு!

வரும் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ... மேலும் பார்க்க

வெளிநாடுகளுக்குச் சென்ற எம்.பிக்கள் குழுவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள எம்.பிக்கள் குழுவை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான... மேலும் பார்க்க

மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால் கடந்த வாரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த ந... மேலும் பார்க்க

பிகாரில் பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்துக்கு உள்ளான சிறுமி! உடனடி சிகிச்சை கிடைக்காமல் பலியான அவலம்!

பாட்னா: பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சிறுமி சிகிச்சைக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பலியாகியுள்ளார்.பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்த நபரால், கத்த... மேலும் பார்க்க