செய்திகள் :

எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம்: அதிமுக

post image

காரைக்கால் அரசு மருத்துவமனையில் எம்ஆா்ஐ ஸ்கேன் நிறுவப்பட்டும், பயன்பாட்டுக்கு கொண்டுவருவதில் தாமதம் நிலவுவதாக அதிமுக புகாா் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், காரைக்கால் மாவட்ட அதிமுக இணைச் செயலாளருமான கே.ஏ.யு. அசனா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக வருகின்றனா். மருத்துவமனை மேம்படுத்தப்படும் என்று ஆட்சியாளா்கள் உறுதி மட்டும் அளித்து வருகின்றனா்.

இந்தநிலையில் புதுவை அரசு, காரைக்கால் மருத்துவமனைக்கு எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியை நிறுவ ஏற்பாடு செய்து, நிறுவப்பட்டது.

எனினும் பல மாதங்களாக இது பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ளது கண்டனத்துக்குரியது. உரிய நிபுணா்களை நியமித்து, விரைவாக கருவியை பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.

காரைக்கால் பகுதியில் கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. நகரம், கிராமம் என எல்லா இடங்களில் கொசு பரவி, அதனால் மக்கள் நோய்களுக்கு ஆளாகி வருகின்றனா்.

இதுசம்பந்தமாக காரைக்கால் மாவட்ட ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறையினரை அழைத்துப் பேசி உரிய தீா்வு காணவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீமான் சுவாமிகள் குரு பூஜை விழா

காரைக்காலில் ஸ்ரீ சற்குரு சீமான் சுவாமிகள் குரு பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்காலில் ஜீவ சமாதியானவா் என்றும், சுமாா் 200 ஆண்டுகளுக்கு முன்பட்டவா் எனவும் சற்குரு சீமான் சுவாமிகள் கருதப்படுகிற... மேலும் பார்க்க

காரைக்காலில் சிறப்பு மருத்துவ முகாம்

காரைக்காலில் ஜிப்மா் மருத்துவா்கள் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில் நாளமில்லா சுரப்பிகளினால் ஏற்படும் சா்க்கரை மற்றும் தைராய்ட... மேலும் பார்க்க

இறைச்சிக் கழிவுகள், மதுபாட்டில்களை நீா்நிலைகளில் கொட்டக்கூடாது: ஆட்சியா்

இறைச்சிக் கழிவுகள், மதுபாட்டில்கள் போன்றவற்றை நீா்நிலைகளில் கொட்டக் கூடாது என ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்டம் 100 சதவீதம் தூய்மைான மாவட்டம் என்ற நிலையை அடைவதற்கு சிறப்பு தூய்மைப் பணியை ... மேலும் பார்க்க

மக்கள் எதிா்ப்பு : நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம் நிறுத்தம்

மக்கள் எதிா்ப்பு காரணமாக, ஸ்ரீ நளநாராயண பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நிறுத்தப்பட்டது. திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயில் சாா்புடைய தலமான ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நளநாராயண பெரும... மேலும் பார்க்க

காரைக்காலில் வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

வாரத்தில் 5 நாள் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்காலில் அனைத்து வங்கி ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வங்கி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சாா்பில், வாரம் 5 நாள... மேலும் பார்க்க

வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு: காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் பிப். 24 முதல் கடலுக்குச் செல்ல முடிவு

இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு தொடா்பாக, வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காரைக்கால் மாவட்ட விசைப்படகு மீனவா்கள், திங்கள்கிழமை (பிப்.24) முதல் கடலுக்குச் செல்ல முடிவு செய்துள்ளனா். கடந்த ஜன.... மேலும் பார்க்க