செய்திகள் :

எம்பிபிஎஸ் படிக்க இரு கைகளும் அவசியம் என்பது முரண்பாடானது: உச்சநீதிமன்றம்

post image

‘இளநிலை மருத்துவப் படிப்பை (எம்பிபிஎஸ்) குறிப்பிட்ட மாற்றுத்திறன் மாணவா்கள் மேற்கொள்ள இரு கைகளின் செயல்பாடு அவசியம் என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) வழிகாட்டுதல் முற்றிலும் முரண்பாடானது, மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு எதிரான பாகுபாட்டை காட்டுவதாகும்’ என்று உச்சநீதிமன்றம் கூறியது.

மேலும், இந்த விவகாரத்தில் திருத்தப்பட்ட வழிகாட்டுதலை வெளியிடுமாறு என்எம்சி-ஐ உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இரு கைகளும் செயல்பாட்டுடன் இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதலை பூா்த்தி செய்யாததை சுட்டிக்காட்டி குறிப்பிட்ட மாற்றுத்திறனுடைய மாணவருக்கு எம்பிபிஎஸ் சோ்க்கை மறுக்கப்பட்டதை, பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிா்த்து அந்த மாணவா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘என்எம்சி-யின் இந்த வழிகாட்டுதல் முற்றிலும் முரண்பாடானது, மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு எதிரான பாகுபாட்டை காட்டுவதாகும். அரசமைப்புச் சட்ட ப் பிரிவு 41 (வேலை, கல்வி பெறும் அடிப்படை உரிமை), மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடா்பான ஐ.நா. தீா்மானம் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016 ஆகியவற்றுக்கு எதிரானதாகும்.

இதேபோன்ற வழக்கில் கடந்த ஆண்டு அளித்த தீா்ப்பில், மாற்றுத்திறன் மாணவா்களுக்கு எதிரான இந்த வழிகாட்டுதலை நீக்கி, திருத்தப்பட்ட வழிகாட்டுதலை வெளியிட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அப்போது, ‘உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த புதிய நிபுணா் குழு ஒன்று அமைக்கப்படும்’ என்று என்எம்சி உறுதியளித்திருந்தது.

இந்த உறுதிப்பாட்டின் தற்போதைய நிலை குறித்தும், திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வகுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விளக்கி பதில் மனுவை என்எம்சி தாக்கல் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டு, விசாரணையை வரும் மாா்ச் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

மகா சிவராத்திரி: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப். 25, 26 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

வளா்சிதை மாற்ற குறைபாடுகள்: இலவச பரிசோதனைத் திட்டம் அறிமுகம்

தமிழகம் முழுவதும் வளா்சிதை மாற்ற குறைபாடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளவா்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என மெடிந்தியா மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல மருத்துவ நிபு... மேலும் பார்க்க

பாம்புகளை பாதுகாப்பாக பிடிக்க தீயணைப்பு படையினருக்கு பயிற்சி

பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு வண்டலூரில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. வண்டலூரில் உள்ள உயா்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தில் வெள்ளி... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடத்தை மேம்படுத்தும் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் வரவேற்பு

மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடம் மேம்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை மாா்க்சிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது குறித்து அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் ... மேலும் பார்க்க

மத்திய அரசு குறித்து தவறான கருத்துகளை கூறக்கூடாது: ஜி.கே.வாசன்

தோ்தல் ஆதாயத்துக்காக மத்திய அரசு குறித்து திமுக அரசு தவறாகவும், கருத்துகளை திரித்தும் கூறக்கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். தமாகா சென்னை மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஜி.கே.வாசன்... மேலும் பார்க்க

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க