செய்திகள் :

எம்.எஸ்.தோனி தனித்துவமான கேப்டன்..! ஜஸ்டின் லாங்கர் புகழாரம்!

post image

ஐசிசியின் வாழ்நாள் சாதனையாளர் (ஹால் ஆஃப் ஃபேம்) விருதுக்கு தோனி தேர்வாகியுள்ளதற்கு முன்னாள் ஆஸி. வீரர் “தோனி தனித்துவமானவர்” எனப் புகழ்ந்து கூறியுள்ளார்.

மேத்யூ ஹைடன், ஹாசீம் அம்லா, கிரீம் ஸ்மித், டேனியல் வெட்டோரி, சனா மிர், சாரா டெய்லர், தோனி ஆகிய ஏழ்வருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.

பலரும் தோனிக்கு வாழ்த்து கூறிவரும் நிலையில் முன்னாள் ஆஸி. வீரரும் பயிற்சியாளருமான ஜஸ்டின் லாங்கர் கூறியது கவனம் ஈர்த்துள்ளது.

இந்தியர்கள் வரிசையில் 11-ஆவது நபராக இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதினை தோனி பெற்றுள்ளார்.

தோனி குறித்து ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது:

எம்.எஸ்.தோனி எந்த காலத்துக்குமான தலைசிறந்தவர். அனைத்து கேப்டன்களும் தோனியைப் போலவே இருக்க விரும்புவர். ஆனால், யாராலும் தோனியாக முடியாது. ஏனெனில் தோனி தனித்துவமான கேப்டன், தனித்துவமான தலைவர், தனித்துவமான மனிதர்.

தோனிக்கு எதிராக எப்போது விளையாடினாலும் ஃபினிஷராகிய அவர் ஆட்டமிழக்கும்வரை போட்டி முடிவதில்லை எனக் கூறியுள்ளார்.

ஐசிசி டி20, ஒருநாள், சாம்பியன் டிராபி கோப்பைகளை வென்ற ஒரே இந்திய கேப்டனாக எம்.எஸ்.தோனி இருக்கிறார்.

கம்மின்ஸ் 6 விக்கெட்டுகள்: 138 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் அசத்தல் பந்துவீச்சால் தெ.ஆ. அணி 138 ரன்களுக்கு சுருண்டது.லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 121க்கு ஆல் அவுட் ஆக, முதல் நாள் முடி... மேலும் பார்க்க

பிஜிடி தொடரின் தோல்விக்குப் பின் கோலியை கேப்டனாக்கி இருப்பேன்: ரவி சாஸ்திரி

விராட் கோலியின் ஓய்வு சரியாக கையாளப்பட்டிருக்க வேண்டுமென ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.ஆஸ்திரேலியாவுடனான பிஜிடி தொடரின் தோல்விக்குப் பிறகு விராட் கோலி தனது ஓய்வை அறிவித்தார். அதாவது, கடந்த மாதம் ஐபிஎல் போ... மேலும் பார்க்க

2-ஆம் நாள் உணவு இடைவேளை: பெடிங்ஹாமின் நிதான ஆட்டத்தால் தெ.ஆ. எழுச்சி!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் 2ஆம் நாளின் உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்களை எடுத்துள்ளது. லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்... மேலும் பார்க்க

குழந்தைகளுடன் சேர்ந்து லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய ஏபிடி வில்லியர்ஸ்..!

ஏபிடி வில்லியர்ஸ் தனது குழந்தைகளுடன் மார்னஸ் லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய விடியோ வைரலாகியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியைப் பார்க்க பல முன்னாள்... மேலும் பார்க்க

ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் “நான் ஏன் ஆர்சிபி அணியை வாங்கப் போகிறேன். நான் என்ன பைத்தியக்காரனா?” எனக் கூறியுள்ளார். ஐபிஎல் தொடங்கிய 18 ஆண்டுகளில் ஆர்சிபி இந்தாண்டு முதல்முறையாக கோப்பையை வெ... மேலும் பார்க்க

டபிள்யூடிசி: முதல் இன்னிங்ஸில் கற்றுக்கொண்ட பாடம் என்ன? ஸ்டீவ் ஸ்மித் பதில்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் தான் கற்றுக்கொண்ட பாடம் குறித்து பேசியுள்ளார். டபிள்யூடிசி இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212-க்கு ஆல... மேலும் பார்க்க