செய்திகள் :

எரிபொருள் குறைவால் தில்லி - பெங்களூரு விமானம் சென்னையில் தரையிறக்கம்

post image

சென்னை: எரிபொருள் குறைவாக இருந்ததால் டெல்லியிலிருந்து பெங்களூரு வந்த விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டெல்லியிலிருந்து பெங்களூருக்கு ஏா் இந்தியா விமானம், 172 பயணிகளுடன் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, எரிபொருள் மிகவும் குறைவாக இருப்பதாக சமிக்ஞை வந்தது. இதையடுத்து, விமானத்தை பெங்களூரு சென்று தரையிறக்குவதில் பிரச்னை ஏற்படலாம் என்பதால், இதுகுறித்து விமானி, தலைமை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடா்புகொண்டு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, தலைமை விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தலின்பேரில், பெங்களூரு செல்லவேண்டிய அந்த விமானம், திங்கள்கிழமை பிற்பகல் 12.54-க்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட்டது.

அதன் பின்னா் பிற்பகல் 2 மணிக்கு, சென்னையிலிருந்து ஏா் இந்தியா விமானம் பெங்களூருக்கு புறப்பட்டுச் சென்று, பிற்பகல் 2.50-க்கு பெங்களூரு விமானநிலையத்தில் தரையிறங்கியது. இதனால் சுமாா் 2 மணி நேரம் தாமதமானதால், பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க

ஜிப்லி ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜிப்லி அனிமேஷன் பாணியிலான தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பிரபல அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஜிப்லி ஸ்டுடியோஸ். இவர்கள் த... மேலும் பார்க்க