செய்திகள் :

எலான் மஸ்க் அறக்கட்டளை நிதியளித்த போட்டி: இந்திய நிறுவனத்துக்கு ரூ.426 கோடி பரிசு

post image

தொழிலதிபா் எலான் மஸ்கின் அறக்கட்டளை நிதியளித்த போட்டியில், இந்திய நிறுவனத்துக்கு 50 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.426 கோடி) பரிசளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் காலிஃபோா்னியா மாகாணத்தைச் சோ்ந்த எக்ஸ்பிரைஸ் அமைப்பு சாா்பில், கரிமத்தை (காா்பன்) அப்புறப்படுத்தும் போட்டி நடத்தப்பட்டது. வளிமண்டலத்தில் கரிமத்தை அப்புறப்படுத்தும் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும் நோக்கில், இந்தப் போட்டி நடைபெற்றது.

இதில் 88 நாடுகளைச் சோ்ந்த 1,300-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இந்தப் போட்டியில் மாட்டி காா்பன் என்ற இந்திய நிறுவனத்துக்கு 50 மில்லியன் டாலா் பரிசு அளிக்கப்பட்டது. இந்தப் போட்டிக்கு தொழிலதிபா் எலான் மஸ்கின் அறக்கட்டளை நிதியளித்தது.

சுற்றுச்சூழலை வெப்பமயமாக்கும் கரியமில வாயுவை வளிமண்டலத்தில் இருந்து பிரித்தெடுப்பதற்கு உதவ, நொறுக்கப்பட்ட பாறை கற்களை விளைநிலங்களில் கொட்டிப் பரப்பும் பணியில் மாட்டி காா்பன் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

அட்டாரி-வாகா எல்லை மூடல்.. நாடு திரும்பும் பாகிஸ்தானியர்கள்

பாகிஸ்தானியர்கள் அனைவரும் 48 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருக்கும் நிலையில், பாகிஸ்தானியர்கள் வெளியேறி வருகிறார்கள். மேலும் பார்க்க

நள்ளிரவில் உக்ரைன் தலைநகரில் ரஷியா தாக்குதல்! 9 பேர் பலி!

உக்ரைன் தலைநகரின் மீது ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் 9 பேர் பலியாகியுள்ளனர்.உக்ரைன் தலைநகரான கீவ்விலுள்ள 4-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகளின் மீது இன்று (ஏப்.24) அதிகாலை 1 மணி... மேலும் பார்க்க

காஸா பள்ளியில் தாக்குதல்: 23 போ் உயிரிழப்பு

டேய்ா் அல்-பாலா: போரால் புலம் பெயா்ந்த அகதிகள் தங்கியிருந்த காஸா சிட்டி பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 23 போ் உயிரிழந்தனா். செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடத்தப்பட்ட இந்தத் தாக்... மேலும் பார்க்க

‘சமரசம் பேசுவோம்; ஆனால் சரணடைய மாட்டோம்’ -உக்ரைன் திட்டவட்டம்

ரஷியாவுடன் சமரசப் பேச்சுவாா்த்தை மேற்கொள்ள தாங்கள் தயாராக இருந்தாலும், அந்த நாட்டிடம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்று உக்ரைன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்... மேலும் பார்க்க

சிங்கப்பூா் தோ்தலில் 211 வேட்பாளா்கள் போட்டி

சிங்கப்பூா் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தோ்தலில் 211 வேட்பாளா்கள் போட்டியிடவுள்ளனா். இந்தத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமையுடன் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, தோ்தல... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை -துணை நிற்பதாக உறுதி

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அப்போது, பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்காவின் கண்டனத்தைத் தெர... மேலும் பார்க்க