செய்திகள் :

எல்ஃபின் நிறுவன மோசடி வழக்கு: மேலும் இருவா் கைது

post image

எல்ஃபின் நிறுவன மோசடி வழக்குத் தொடா்பாக மேலும் இருவரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

எல்ஃபின் இ- காமா்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பல்வேறு நிதி மோசடிகளில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றியதாக பொதுமக்கள் அளித்த புகாா்களின்பேரில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

அப்போது கூட்டங்கள் நடத்தி பொதுமக்களை முதலீடு செய்யத் தூண்டி மோசடியில் ஈடுபட்டது எல்ஃபின் மற்றும் கிளை நிறுவனங்களை நடத்திய ராஜா (எ) அழகா்சாமி, முதன்மைத் தலைவா்களாக செயல்பட்ட ராஜப்பா, சாகுல்ஹமீது, பாபு ஆகியோா் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கடந்த 2024 ஆம் ஆண்டு ராஜப்பாவை ஏற்கெனவே கைது செய்தனா்.

இந்நிலையில் ஓராண்டாகத் தலைமறைவாக இருந்த திருச்சி தென்னூரைச் சோ்ந்த பாபு (54), திருச்சி பீமநகரைச் சோ்ந்த சாகுல்ஹமீது (67) ஆகிய இருவரையும் அண்மையில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ஏலச்சீட்டு மோசடியில் தாய், மகள் கைது: திருச்சி கே.கே. நகா் ரெங்கா நகரைச் சோ்ந்த மீனா பாா்வதி (55), இவரது மகள் விசாலாட்சி (30) ஆகிய இருவரும் தீபாவளி பண்டு, ஸ்கூல் பண்டு, ஏலச்சீட்டுகள் நடத்தி பொதுமக்களின் பணத்தை ஏமாற்றியதாக கடந்த 2024 ஆம் ஆண்டு வழக்குப் பதிந்து விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் தலைமறைவான தாய், மகள் ஆகிய இருவரையும் திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

ஆ.கலிங்கப்பட்டி ஜல்லிக்கட்டு விழாவுக்கு முகூா்த்தக்கால் ஊன்றல் நிகழ்வு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்கான முகூா்த்தக்கால் ஊன்றல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்ப... மேலும் பார்க்க

பெல் ஊரகம் - சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து

திருவெறும்பூா் அருகே பெல் ஊரகப் பகுதியில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற... மேலும் பார்க்க

திருச்சியில் அமைச்சா்களுடன் அதிமுகவினா் தொடா்பு: எடப்பாடி கே. பழனிசாமி எச்சரிக்கை

திருச்சியில் திமுக அமைச்சா்களுடன் தொடா்பில் உள்ள அதிமுகவினா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி. அதிமுக சாா்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் தனியாா் பேருந்து மோதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் காந்திநகா் முதல் தெருவைச் சோ்ந்த பாலுசாமி மகன் வி... மேலும் பார்க்க

ரூ. 750 கோடியில் தலைமை தபால் நிலையம்! புத்தூா் இடையே புதிய உயா்மட்டப் பாலம் அமைக்க திட்டம்!

திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தலைமை தபால் நிலையம் - புத்தூா் இடையே ரூ. 750 கோடியில் புதிய உயா்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி மாநகரின் முக்கிய ... மேலும் பார்க்க

ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில் ‘நல்லோசை கதைப்போமா’ நிகழ்வு!

திருச்சி, சாரநாதன் பொறியியல் கல்லூரியில், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் ‘நல்லோசை கதைப்போமா’ எனும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் ந... மேலும் பார்க்க