செய்திகள் :

``எல்லாவற்றையும் கூகுள், AI பார்த்துக்கொள்ளும் என்று மெத்தனமாக இருக்க வேண்டாம்'' - ஸ்டாலின் அறிவுரை

post image

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வில் ரூ. 277 கோடி மதிப்பில் பாரத் சாரண சாரணியர் தலைமை அலுவலகக் கட்டடம் மற்றும் 243 புதிய பள்ளிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக் கட்டடங்களைத் திறந்து வைத்தார் முதல்வர்.

உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின், அன்பில் மகேஷ்

இவ்விழாவில் AI தொழில்நுட்பம் குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின்,
"எதுவானாலும் கூகுள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திடம் கேட்கலாம் என்ற மெத்தனத்தில் இருந்துவிடக்கூடாது.
மாணவர்களின் சிந்தனையை தூண்டி, அறிவை மேம்படுத்த வேண்டும் என்பது நமது கடமை.
தேவையற்ற தகவல்கள் தற்போது அதிகமாகியுள்ளது. குழந்தைகளுக்கு சரியான விஷயத்தைக் கற்று தர வேண்டும்.
தொழில்நுட்பம், மனித சந்ததிக்கான வேறுபாட்டை உணர்த்த வேண்டும்" என்றார்.

மாணவர்களின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

இதைத்தொடர்ந்து புதிய ஆசிரியர்கள் பற்றி முதல்வர் கூறியதாவது:
"மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியர் பணிக்கு வந்துள்ளவர்களுக்கு வாழ்த்துகள்.
மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் எடுப்பார்கள். ஆனால், ஆசிரியர்களுக்கே பாடம் எடுத்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
ஆசிரியர் என்பவர் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுப்பவர் அல்ல; ஆசிரியர் முன்னால் அமர்ந்திருப்பவர்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள்.

ஸ்டாலின், அன்பில் மகேஷ்
ஸ்டாலின், அன்பில் மகேஷ்

மாணவர்களின் சிந்தனையை தூண்டி, அறிவை மேம்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது.
பாடப்புத்தகத்தைத் தாண்டி சமூக ஒழுக்கத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும்.
மாணவர்களிடம் ஆசிரியர்கள் நண்பர்களாக நடந்து கொள்ள வேண்டும்.
மாணவர்களுக்கு உடல்நலமும் மனநலமும் முக்கியம்.
அவர்களின் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்," என்று பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Modi: "இந்தியாவின் மிகப்பெரிய எதிரி இதுதான்;எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு..!" - பிரதமர் மோடி

குஜராத்தின் பாவ் நகரில் ரூ.34,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.இதையடுத்து இந்தியாவின் வளர்ச்சிக் குறித்துப் பேசிய மோடி, இந்தியாவின் எதிரி மற்ற நாடுகளைச் சார்... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் கவனத்திற்கு; `QR code' டிக்கெட் சேவை பாதிப்பு; CMRL அறிவுரை

சென்னையின் மக்கள் தொகை காரணமாக போக்குவரத்து நெரிசல் பெரிதாக இருந்து வந்தது. இந்தப் பிரச்னைக்கு சின்ன ஆசுவாசத்தை கொடுத்திருக்கின்றன மெட்ரோ ரயில்கள்.சென்னை மெட்ரோ ரயிலில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் அலுவ... மேலும் பார்க்க

Army: லடாக் பனிமலை அதிகாரி டு வெலிங்டன் ராணுவ கல்லூரி கமாண்டென்ட்; யார் இந்த மணீஸ்யெரி?

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் நூற்றாண்டு பழைமை வாய்ந்த ராணுவ பயிற்சி மையம் இயங்கி வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது 'மெட்ராஸ் ரெஜிமெண்ட் சென்டர்' என்ற பெயரில் தொடங்கப்பட... மேலும் பார்க்க

``பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறக் காரணம் இதுதான்; டிசம்பரில் நல்ல செய்தி'' - டிடிவி தினகரன்

மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து விலகுவதாக வெளிப்படையாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து பாஜக தலைமையிலான... மேலும் பார்க்க

TVK: விஜய் வீட்டின் மாடியில் புகுந்த இளைஞர்; பலத்த பாதுகாப்பை மீறி சென்றது எப்படி? -போலீசார் விசாரணை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் நீலாங்கரை வீட்டில் மொட்டை மாடியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் இருந்துள்ளார். பலத்த பாதுகாப்பையும் மீறி, மாடியில் இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்ததைப் பார்த்து விஜ... மேலும் பார்க்க

பழனி: பழங்குடி மக்களின் துயரத்தை எடுத்துரைத்த ஜூ.வி... வீடு கட்டும் ஆணை பிறப்பித்த அரசு நிர்வாகம்!

பழனியில் உள்ள மண் திட்டில் பகுதியில் வசிப்பதற்கு வீடில்லாமல் கிழிந்த தார்பாய்களால் பெரும் சிரமத்துடன் வசிப்பதாக ஜுனியர் விகடன் இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த செய்திக்காக மாவட்ட ஆட்சியர் சரவண... மேலும் பார்க்க