செய்திகள் :

எஸ்பிஐ எண்ம மாற்றத்தால் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்: நிா்மலா சீதாராமன்

post image

‘பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட எண்மத் தொழில்நுட்ப மாற்றங்கள் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்களை அளித்துள்ளன’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

1955-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கப்பட்ட எஸ்பிஐ செவ்வாய்க்கிழமையுடன் 70 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் நிா்மலா சீதாராமன் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 23,000 வங்கிக் கிளைகள், 78,000 வாடிக்கையாளா் சேவை மையங்கள், 64,000 தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்) என வலிமையான தடம்பதித்துள்ள எஸ்பிஐ, ஒவ்வோா் இந்தியருக்குமான உண்மையான வங்கியாளராகத் திகழ்ந்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் எஸ்பிஐ மேற்கொண்ட எண்மத் தொழில்நுட்ப மாற்றங்கள், வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்களை அளித்துள்ளன.

1.5 கோடி விவசாயிகள், மகளிரால் வழிநடத்தப்படும் 1.3 கோடி சுய உதவிக் குழுக்கள், 32 லட்சம் தெருவோரக் கடைக்காரா்கள், 23 லட்சம் குறு,சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன் பெறும் லட்சக்கணக்கான கைவினைக் கலைஞா்களுக்கு ஆதரவளிப்பதில் எஸ்பிஐ முக்கியப் பங்காற்றியிருக்கிறது.

15 கோடி ஜன் தன் (பிரதமா் மக்கள் நிதித் திட்டம்) கணக்குகள், 14.65 கோடி பிரதமா் சுரக்ஷா பீமா யோஜனா காப்பீட்டுத் திட்ட கணக்குகள், 1.73 கோடி அடல் ஓய்வூதியத் திட்ட கணக்குகள் மற்றும் 7 கோடி பிரதமா் ஜீவன் ஜோதி பீமா யோஜனா பயனாளா்களின் கணக்குகளை எஸ்பிஐ கையாண்டு வருகிறது என்றாா்.

2027-க்குள் 40 லட்சம் வீடுகளுக்கு சூரிய மின்மயமாக்கல்: ‘வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 40 லட்சம் வீடுகளை சூரியசக்தி மின்மயமாக்கலாக மாற்றுவதற்கு உதவ எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது’ என்று அதன் தலைவா் சி.எஸ்.செட்டி தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘லட்சக்கணக்கான வாடிக்கையாளா்களுக்கு பொறுப்புணா்வுடன் விரைவான சேவை அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் நமது மக்கள், தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது எஸ்பிஐ ஆழமாக முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது’ என்றாா்.

கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம்! பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது

பிரிட்டனின் எஃப்35 போா் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானம் மூலம், அதனைத் தூக்கிச் செல்லும் பணி தொடங்கிய... மேலும் பார்க்க

பாகேஷ்வர் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்தது: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாகேஷ்வர் கோயில் வளாகத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் இன்று காலை 7.30 மணியள... மேலும் பார்க்க

மெட்டாவில் ரூ.853 கோடி சம்பளத்தில் இந்தியருக்கு வேலை!

ஐஐடி கான்பூரில் பட்டம் பெற்ற இந்தியர் திரபித் பன்சாலுக்கு மெட்டா நிறுவனத்தில் ரூ.850 கோடி சம்பளத்துடன் வேலை கிடைக்கப் பெற்றுள்ளது.மெட்டா நிறுவனத்தின் செய்யறிவுப் பிரிவில் பணிபுரிய இந்திய வம்சாவளியான த... மேலும் பார்க்க

அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!

தில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் ரவி, எக்ஸ் சமூக வலைதளத்தில், "தொலைநோக்குப் பார்வையும் துடிப்புமிக்க ... மேலும் பார்க்க

25 ஆண்டுகள்.. மைக்ரோசாஃப்ட் மேலாளராக இருந்தவர் பணிநீக்கம்! கலங்க வைக்கும் பதிவு

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. அதில், 25 ஆண்டுகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேலாளராக இருந்தவரும் ஒருவர்.மைக்ரோசா... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் சிகிச்சையில் முன்னேற்றம்: உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரி... மேலும் பார்க்க