செய்திகள் :

எஸ்.பி. வேலுமணி மகன் ரிசப்ஷன் : 1 லட்சம் பேர்; 30 வகை உணவுகள்; கோவையில் மாநாடு போல பிரமாண்டம்

post image

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மகன் விஜய் விகாஷ் – தீக்‌ஷனா தம்பதிக்கு கடந்த மார்ச் 3-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேலுமணி மகன் திருமணம்

ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. வேலுமணி பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதால் தான் எடப்பாடி திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்று தகவல் வெளியானது.

கொடிசியா ஹாலில் பிரமாண்ட ஏற்பாடு

மறுபக்கம் இந்த திருமண நிகழ்வில் எடப்பாடி பழனிசாமியின் மனைவி, மகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கொடிசியா வளாகத்தில் இன்று (மார்ச் 10-ம் தேதி) திருமண வரவேற்பு நடைபெறவு உள்ளதாகவும், அதில் எடப்பாடி கலந்து கொள்வார் என்றும் கூறப்பட்டது. அதன்படி கோவை கொடிசியா ஹாலில் இன்று வேலுமணி மகன் விகாஷ் திருமண வரவேற்பு நடைபெறவுள்ளது.

கொடிசியா வளாகம்

திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அதிமுக தொண்டர்களுக்கும் இன்று நடைபெறும் ரிசப்ஷனுக்கு தான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

`முழுக்க முழுக்க அதிமுகவினருக்காக’

இன்றைய நிகழ்வு முழுக்க முழுக்க அதிமுகவினருக்காக நடத்தப்படும் விழா. ஏற்கெனவே வேலுமணி மீது எடப்பாடி வருத்தத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், இன்று அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுத்து எந்தப் பிரச்னையும் இல்லை என்று நிரூபிப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இதனால் இந்த ரிசப்ஷனை கட்சி மாநாடு போல பிரமாண்டமாக நடத்துகிறார். இதற்காக கொடிசியா வளாகத்தில் உள்ள ஏ,பி,சி ஆகிய மூன்று ஹால்கள் எடுக்கப்பட்டுள்ளன.

சுமார் 65,000க்கும் மேற்பட்ட அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ரிசப்ஷனில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று அவரும், எடப்பாடி பழனிசாமியும் சந்தித்து பேச வாய்ப்புள்ளது என்கிறது அதிமுக வட்டாரம்.

பூங்குன்றன்

பலர் நேற்றில் இருந்தே கொடிசியா வரத்தொடங்கிவிட்டனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் நேற்று இரவு வந்து மணமக்களை வாழ்த்தி சென்றார்.

30 வகை உணவுகள்

ரிசப்ஷனில் சுமார் 30 வகை உணவுகள் பரிமாறப்படவுள்ளன. மூன்று ஹால்களிலும் பஃபே முறையில் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவிஐபிகளுக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் கொடிசியா வளாகம் எதிர்புறம் உள்ள மைதானத்திலும் உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்அவுட்கள்

எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக பிரமாண்ட நுழைவு, 100 அடி உயரத்தில் பேனர் மற்றும் கட்அவுட்களும் வைக்கப்பட்டுள்ளன.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`நான் கனடிய மக்களை ஏமாற்றவில்லை; ஒவ்வொரு நாளும்..!'- பிரிவு உபசார விழாவில் கண்கலங்கிய ஜஸ்டின் ட்ரூடோ

இந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக, கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ருடோ (Justin Trudeau) அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய பிரதம... மேலும் பார்க்க

அதிமுக : சட்டசபை கூட்டணி கணக்கை சொல்லும் மாநிலங்களவை `சீட்’ கணக்கு - தேமுதிக இனி?!

கடந்த 2019-ம் ஆண்டு ஜூலையில் தமிழ்நாட்டிலிருந்து 6 மாநிலங்களவை எம்.பி-க்கள் தேர்வாகினர். இதில் தி.மு.க-விலிருந்து வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம் அப்துல்லா, தி.மு.க கூட்டண... மேலும் பார்க்க

``மூன்றாவது குழந்தை... பெண் என்றால் ரூ.50,000; ஆண் என்றால் பசு" - ஆந்திர எம்.பி அதிரடி அறிவிப்பு!

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டம் இந்தியளவில் குறிப்பாக தென்னிந்தியாவை அச்சுறுத்தியிருக்கிறது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்திய தென்னிந்தியாவில் குழந்தை பிறப்பு வி... மேலும் பார்க்க

`மக்கள் உரிய நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள்' - தர்மேந்திர பிரதானைச் சாடிய செல்வப்பெருந்தகை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இதில், மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் கல்வி நிதி மறுக்கப்படுவது குறித்து கேள்வியெழ... மேலும் பார்க்க

போலி வாக்காளர் அட்டை: "எல்லா மாநிலங்களிலும் கேள்விகள் எழுகின்றன" - விவாதிக்கக் கோரும் ராகுல் காந்தி

இந்தியாவின் பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கியது. இதில் வாக்காளர் அடையாள அட்டை எண் தொடர்பான விவாதத்துக்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைப... மேலும் பார்க்க

Lalit Modi: அதிரடி உத்தரவிட்ட VANUATU பிரதமர்; ரத்தாகும் லலித் மோடியின் பாஸ்போர்ட் - பின்னணி என்ன?

இந்தியாவில் பல ஆயிரம் கோடி புரளக்கூடிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அறிமுகம் செய்த லலித் மோடி இப்போது லண்டனில் இருக்கிறார். அவர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து, அவர... மேலும் பார்க்க