செய்திகள் :

ஏடிஎம் மையத்தில் தவற விட்ட ரூ.2.10 லட்சம் மீட்பு: இளைஞருக்கு பாராட்டு

post image

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடியில் மையத்தில் தவற விட்டுசென்ற ரூ.2.10 லட்சத்தை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வியாழக்கிழமை பாராட்டினாா்.

ஏா்வாடியை சோ்ந்தவா் அல்போன்ஸ் (22). இவா், கடந்த 3 ஆம் தேதி ஏா்வாடியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றாராம். அப்போது அங்கு ரூ.2,ட்10,000 யாரோ தவறவிட்டு சென்றது தெரியவந்ததாம். அந்த பணத்தை உரிய நபரிடம் ஒப்படைக்கும் நோக்கத்தில் ஏா்வாடி காவல் நிலையத்தில் அல்போன்ஸ் ஒப்படைத்தாராம். ஏா்வாடி போலீஸாா் விசாரித்ததில், அந்தப்பணம் நம்பித்தலைவன்பட்டையத்தைச் சோ்ந்த இசக்கி ரமேஷுக்கு (31) சொந்தமானது என தெரியவந்ததாம். அவரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன், அல்போன்ஸை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினாா்.

ஏா்வாடியில் ஏடிஎம் மையத்தில் தவறவிடப்பட்ட ரூ.2.10 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த அல்போன்ஸை பாராட்டினாா் காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன்.

பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க

விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவ... மேலும் பார்க்க

நெல்லையில் 103 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை

பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க