செய்திகள் :

ஏப்ரலில் உள்ளூர் விமானப் பயன்பாடு 8.5% அதிகரிப்பு!

post image

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் உள்ளூர் விமானப் போக்குவரத்தில் 1.43 கோடி பேர் பயணித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று (மே 21) அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தை ஒப்பிடும்போது, 8.45% பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் உள்ளூர் விமானத்தில் பயணித்தோரின் எண்ணிக்கை 575.13 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் 523.46 லட்சமாக இருந்தது. இதனால் இந்த ஆண்டு உள்ளூர் விமானத்தில் பயணித்தோரின் எண்ணிக்கை 9.87% அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 38.8% பயணிகள் தங்கள் டிக்கெட்டுகளை ரத்து செய்தனர். மோசமான வானிலையே இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நேரடியாக 20,840 பயணிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு விமான நிறுவனங்கள் 41.69 லட்சம் தொகையை இழப்பீடாகத் திரும்ப வழங்கியுள்ளது.

முன்பதிவு ரத்தைப் போன்றே, விமான தாமதமும் முக்கிய காரணியாக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 96,350 பேர் விமான தாமதத்தை சந்தித்துள்ளனர். இது மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 68% ஆகும். இதில் 70% பயணிகள், முந்தைய பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் வந்து சேர்ந்த நேர தாமதத்தாலேயே பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான இண்டிகோ, தனது பயணிகள் சந்தை மதிப்பை 64.1% அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் இது 64% ஆக இருந்தது.

இதேபோன்று ஏர் இந்தியா நிறுவனமும் தனது பயணிகள் சந்தை மதிப்பை 27.2% ஆக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் இது 26.7% ஆக இருந்தது'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க |ஆண்டுக்கு 7.5 லட்சம் வாகனங்களைத் தயாரிக்க இலக்கு: சுசூகி மோட்டார்சைக்கிள்

பாகிஸ்தான் நிராகரிப்பால் ஆலங்கட்டி மழையில் சேதமடைந்த விமானம்: திடுக்கிடும் தகவல்!

தில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்ற இண்டிகோ விமானத்தின் விமானி, அசம்பாவிதத்தை தவிர்க்க பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கு கேட்கப்பட்ட அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளது.இதனால், ஆழங்கட்டி மழையில் சிக்க... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க