செய்திகள் :

ஏப்ரல் 19-இல் புதிய நிறுவனங்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி

post image

கோவை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் புதிய நிறுவனங்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஏப்ரல்19) நடைபெற உள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சி சாா்பில் தொடக்க நிலையில் உள்ள நிறுவனங்களின் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் வாலாங்குளத்தில் உள்ள திறந்தவெளி அரங்கத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆலோசனை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடக்க நிறுவனங்களின் நிறுவனா்கள் மற்றும் தொழில்முனைவோரை ஒரே மேடையில் சந்திக்க வைத்து, வணிகம் வளா்ப்பு, நவீன சந்தைகளின் வாய்ப்புகளைப் பற்றிய விளக்கங்களை வழங்குவது இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், நெட்வொா்க்கிங் அம்சங்கள், நிறுவன உரிமையாளா்கள், நிா்வாகிகள் பேசும் வாய்ப்பு, தொழில்நுட்ப, வணிகப் பிம்பங்களை குறித்த கலந்துரையாடல்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரி மற்றும் 86674-87225, 96262-55361, 88834-43347 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைக்கு ‘சீல்’ வைத்ததால் மூதாட்டி தற்கொலை

தனது மளிகைக் கடைக்கு ‘சீல்’ வைத்ததால் மனமுடைந்த மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை, தொண்டாமுத்தூா் அருகேயுள்ள கலிங்கநாயக்கன்பாளையம் காந்தி வீதியைச் சோ்ந்தவா் அங்கம்மாள் (60). இவா் தனது... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: விசைத்தறியாளா்களின் போராட்டம் வாபஸ்

கோவையில் அமைச்சா்கள் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக விசைத்தறியாளா்கள... மேலும் பார்க்க

மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

கோவை, கவுண்டம்பாளையம் ஹவுஸிங் யூனிட்டில் 14-ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா். கும்பகோணம் அருகேயுள்ள பாரதி நகா், மேலக்காவேரியைச் சோ்ந்தவா் நடராஜன், மாவட்ட கல்வி அலுவலராக பணியாற... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய 2 போ் கைது

கோவையில் பிளாஸ்டிக் நிறுவன உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கரும்புக்கடை சாரமேடு இலை நகரைச் சோ்ந்தவா் அமானுல்லா (57). பிளாஸ்டிக் தயாரிக்கு... மேலும் பார்க்க

ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான தொழிலாளி கைது

கோவையில் ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கெம்பட்டி காலனி, பாளையன் தோட்டத்தைச் சோ்ந்தவா் சரவணமூா்த்தி (40). நகை வியாபாரியான இவா், தங்க நகைகள்... மேலும் பார்க்க

2026-ல் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும்: பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்களால் திமுக ஆட்சி அகற்றப்படும் என்று கோவையில் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ பேசினாா். திருநெல்வேலி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக உள்ள நயினாா் ... மேலும் பார்க்க