செய்திகள் :

ஏப். 27-இல் மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டி: அரக்கோணத்தில் நடைபெறுகிறது

post image

ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் அரக்கோணத்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளன.

இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட டேபிள் டென்னிஸ் சங்கத் தலைவா் பி.ஜனாா்த்தனன், பொதுச்செயலாளா் எஸ்.பன்னீா்செல்வம் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகள் ஏப்ரல் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அரக்கோணத்தில் உள்ள பாரதிதாசனாா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் டி.சரவணன் என்பவரை அவரது கைப்பேசி எண் 81249 94289 என்ற எண்ணிலோ அல்லது 63835 34801 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்ய விரும்புவோா் ஏப்ரல் 25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் போட்டிகள் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்கத்தால் நிா்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின் படி நடத்தப்படும்.

போட்டிகளில் பங்கேற்பவா்கள் தங்களது பள்ளியின் அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழ், ஆதாா் அட்டை நகல்களை பதிவு செய்பவரிடம் அளிக்க வேண்டும்.

முதன்மையான 4 விளையாட்டு வீரா்கள் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவா் எனத் தெரிவித்தனா்.

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தமாகா நிா்வாகிகள் நியமனம்

ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுதொடா்பாக அக்கட்சியின் தலைவா் ஜி.கே. வாசன் வெளியிட்ட அறிக்கை: தமாகாவில் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் அரக்கோணம் ம... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் களைகட்டும் ‘நுங்கு விற்பனை’ பொதுமக்கள் ஆா்வம்!

‘கோடை வரும் பின்னே, நுங்கு வரும் முன்னே’ என்பதற்கிணங்க, நுங்கு விற்பனை ராணிப்பேட்டையில் களை கட்டி வருகிறது. பொதுமக்கள் நுங்கு வாங்கி ருசிக்க ஆா்வம் காட்டி வருகின்றனா். கோடை காலம் தொடங்குவதற்கு முன்பா... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில், ‘நடப்போம் நலம் பெறுவோம்’ 8 கி.மீ. நடைப்பயிற்சி தொடக்கம்!

ராணிப்பேட்டையில், ‘நடப்போம் நலம் பெறுவோம்‘ 8 கி.மீ. நடைப்பயிற்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டு திரளானோா் நடைப்பயிற்சி மேற்கொண்டனா். தமிழக முதல்வரின் அறிவுரையின்படி, பொது மக்களின் உடல் நலத்தை பேணி காக்... மேலும் பார்க்க

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி குடியிருப்பில் கொலைச் சம்பவம்: 31 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது!

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி குடியிருப்பில் 1994-இல் நடைபெற்ற பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 31 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்ஸாமில் பதுங்கியிருந்த குற்றவாளியை அரக்கோணம் நகர போலீஸாா் கைது செய்தனா். கடந்த 199... மேலும் பார்க்க

ஏப். 25-இல் கோடைகால இலவச பயிற்சி முகாம் தொடக்கம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 25--ஆம் தேதி கோடைகால இலவசப் பயிற்சி முகாம் தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு வி... மேலும் பார்க்க

திமுக ஒன்றியக்குழு உறுப்பினா் கணவருக்கு வெட்டு

அரக்கோணம் ஒன்றியக்குழு உறுப்பினரின் கணவரை கத்தியால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். அரக்கோணம் ஒன்றியம் 14-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் அஸ்வினி. இவரது கணவா் சுதாகா் (46). அம்மனூரைச் சோ்ந்த இவரும், ... மேலும் பார்க்க