செய்திகள் :

ஏர் இந்தியா விபத்து: போயிங், ஹனிவெல் நிறுவனங்கள் மீது வழக்கு!

post image

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் போயிங் மற்றும் ஹனிவெல் நிறுவனங்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள், 12 ஊழியா்களுடன் புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், ஒரு நிமிஷத்துக்குள்ளாகவே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தில் மோதி, வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் ஒரேயொரு பயணி தவிர விமானத்தில் இருந்த 241 பேரும், விடுதி வளாகத்தில் 19 பேரும் பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், எரிபொருள் ஸ்விட்ச் அணைக்கப்பட்டிருந்ததே விபத்து ஏற்படக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தினர், அமெரிக்காவின் டெலாவேர் மாகாண நீதிமன்றத்தில் போயிங் மற்றும் ஹனிவெல் நிறுவனங்களுக்கு எதிராக மனு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், “தவறான எரிபொருள் ஸ்விட்ச் வடிவமைப்பால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும், அபாயங்கள் குறித்து அறிந்திருந்தும் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், போயிங் மற்றும் ஹனிவெல் நிறுவனங்கள் நஷ்டஈடு வழங்க உத்தரவிடக் கோரப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை விரைவில் நீதிபதியின் முன் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, ஏர் இந்தியா விமான விபத்தில் மீட்கப்பட்ட கருப்புப் பெட்டி, விமானிகள் அறை குரல் பதிவு உள்ளிட்டவற்றின் முழுமையான அறிக்கையை உடனடியாக வெளியிட உத்தரவிடக் கோரி தில்லி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Air India crash: Case filed against Boeing, Honeywell

இதையும் படிக்க : எச்1பி விசா கட்டணம் ரூ. 88 லட்சமாக உயர்வு! இந்தியர்களுக்கு பேரிடி!

இந்தியாவின் பலவீனமான பிரதமர் : எச்1பி விசா கட்டண உயர்வு குறித்து ராகுல் பதிவு

புது தில்லி: நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான பிரதமர் இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர் பலி!

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வெள்ளிக்கிழமை பலியாகினார்.உதம்பூர் மாவட்டத்தில் உள்ள தோடா - உதம்பூர் எல்லையில் கிஷ்த்வார் வனப்பகுதியில் பயங்கரவாத... மேலும் பார்க்க

செல்வ அறிக்கை 2025! கோடீஸ்வர குடும்பங்கள் அதிகம் வாழும் 3வது மாநிலம் தமிழகம்!!

இந்திய நாட்டில், கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. தற்போது நமது நாட்டில் வாழும் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 71 ஆயிரம்.மெர்சிடிஸ்-பென்ஸ் ஹூரூன் இ... மேலும் பார்க்க

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இயக்கத் திட்டம்

விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் கூடிய 2 ‘வந்தே பாரத்’ சரக்கு ரயில்கள் (வந்தே ப்ரைட்) தயாரிக்கும் பணி சென்னை ஐசிஎஃப் வளாகத்தில் நிறைவடைந்துள்ளதை அடுத்து வரும் நவம்பரில் இயக்க திட்டமிட்டுள்ளதாக அதி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ வீரா் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உத்தம்பூா் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் காயமடைந்தாா். சியோஜ் தாா் பகுதியின் எல்லை... மேலும் பார்க்க

இந்திய வலிமையை எதிரிகளுக்கு உணா்த்திய ஆபரேஷன் சிந்தூா்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் ராணுவ வலிமையை ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலமாக எதிரிகளுக்கு நிரூபித்தோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா். பாகிஸ்தானுடன் 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் வ... மேலும் பார்க்க