செய்திகள் :

ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி: தம்பதி கைது

post image

திருவேற்காட்டில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.16 லட்சம் மோசடி செய்த வழக்கில் தம்பதியை ஆவடி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

ஆவடி அருகே அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் சரவணன் (44). தனியார் ஊழியர். கடந்த 2022} ஆம் ஆண்டு மே மாதம் சரவணனுக்கு திருவேற்காடு கோலடி ரெட்டி தெருவைச் சேர்ந்த புருஷோத்தமன், அவரது மனைவி அனிதா ஆகியோர் அறிமுகமாகினராம். அத்தம்பதி, ஏலச்சீட்டு நடத்தி வருவதாகவும், அதில் சேர்ந்து சீட்டு கட்டி லாபம் அடையலாம் என சரவணனிடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர் தலா ரூ.1 லட்சம் என இரு ஏலச்சீட்டுகளுக்கு பணத்தை கட்டியுள்ளார். அதன்பிறகு சீட்டு முடிந்தவுடன் சரவணன் பணத்தைக் கேட்க புருஷோத்தமன் வீட்டுக்குச் சென்றபோது, அங்கு வீடு பூட்டப்பட்டு தம்பதி தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து சரவணன் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை, ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பிவைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

சீட்டு மற்றும் கந்து வட்டி தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் சகாயசெல்வின் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில் புருஷோத்தமன், அவரது மனைவி அனிதா ஆகியோர் சரவணனிடம் மட்டுமல்லாமல், பலரிடம் ரூ.16 லட்சம் வரை மோசடி செய்தது தெரிய வந்தது.

இந்த வழக்குத் தொடர்பாக சென்னை, மாதவரம், அண்ணா தெருவில் தலைமறைவாக இருந்த புருஷோத்தமன் (49), அவரது மனைவி அனிதா (45) ஆகியோரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூா்: தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு 5 இடங்களில் சிறப்பு வகுப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாக மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தோ்வில் பங்கேற்கும் வகையில் 5 மையங்கள் அமைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற உள... மேலும் பார்க்க

திருத்தணியில் ஜமாபந்தி: மனுக்கள் மீது உடனடி தீா்வு காண ஆட்சியா் உத்தரவு

திருத்தணியில் நடைபெற்ற ஜமாபந்தியில் 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, 3 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 3 மாணவா்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ்களையும் ஆட்சியா் மு. பிரதாப் வழங்கினாா். திருத... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட கல்வி அலுவலா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் மாவட்டக் கல்வி அலுவலராக பி.அமுதா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு திருத்தணி இஸ்லாம் நகா் அரசு உயா்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த ரேய்ச்சல் பிரபாவதி, மாவட்ட க... மேலும் பார்க்க

திருவள்ளூரில் ஜமாபந்தி தொடக்கம்

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் அளித்த மனுக்களை உடனே பரிசீலனை செய்து 3 பேருக்கு வீட்டு மனைப்பட்டாக்களை ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(தோ்தல்) ஸ்ரீராம், சட்டப்பேரவை உறுப்பின... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

சோழவரம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மதுவிலக்கு போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக நடந்து வந்த 2 பேரை பிடித்து ச... மேலும் பார்க்க

அனைத்து வாா்டுகளுக்கும் நிதி: மீஞ்சூா் பேரூராட்சி உறுப்பினா் தா்னா

அனைத்து வாா்டுகளுக்கும் சிறப்பு நிதியை ஒதுக்க வலியுறுத்தி மீஞ்சூா் பேரூராட்சி உறுப்பினா் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். பொன்னேரி வட்டம் மீஞ்சூா் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. பேரூராட்சித் ... மேலும் பார்க்க