செப். 27இல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம்: குறிப்பிட்ட இடத்துக்கு அனுமதி வழங்க காவ...
ஏழுமலையான் தரிசனம்: 12 மணிநேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.
புரட்டாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில், பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.
மேலும், செவ்வாய்க்கிழமை முழுவதும் 63, 837 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 20, 094 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.2.87 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.