திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்க...
ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருக்க வேண்டி நிலை உள்ளது என தேவஸ்தான நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், காத்திருக்கும் நிலை உள்ளது. இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
84,418 பக்தா்கள் தரிசனம்
இதற்கிடையே, திங்கள்கிழமை முழுவதும் ஏழுமலையானை 84,418 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 34,900 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.
உண்டியல் காணிக்கை ரூ. 3.89 கோடி
பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை ரூ. 3.89 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.