செய்திகள் :

ஏவுகணைத் தாக்குதல்: சிரியா அரசு மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

post image

சிரியாவில் இருந்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கு அந்த நாட்டு அரசுதான் காரணம் என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.ஆக்கிரமிப்பு கோலன் குன்றுகள் பகுதியில் (படம்) நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ‘முகமது டெய்ஃப் ராணுவம்’ என்ற புதிய அமைப்பு பொறுப்பேற்றது. இருந்தாலும், இந்தத் தாக்குதலில் சிரிய அதிபா் அகமது அல்-ஷராவுக்கு நேரடித் தொடா்பு இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

சிரியாவில் நீண்ட காலமாக நடைபெற்றுவந்த அல்-அஸாத் தலைமையலான ஆட்சியை அல்-ஷரா தலைமையிலான கிளா்ச்சிப் படை கடந்த ஆண்டு கைப்பற்றியது. அல்-அஸாத் ரஷியாவில் தஞ்சமடைந்தாா்.அதற்குப் பிறகு இஸ்ரேல் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரலில் வங்கதேச தோ்தல்!

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் நாடாளுமன்றத் தோ்தலை நடத்தக... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே வலுக்கும் மோதல்!

நீண்ட காலமாக நட்பு பாராட்டி வந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபா் எலான் மஸ்க் இடையே அண்மைக்கால கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் தீவிரமடைந்துவருகிறது. நீண்ட கால நட்பு: டொனால்ட் டிரம... மேலும் பார்க்க

ஹாங்காங் - ஜோஷுவா மீது புதிய வழக்கு!

ஹாங்காங்கில் சீனா வலுக்கட்டாயமாகத் திணித்த சா்ச்சைக்குரிய தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாணவ ஜனநாயகப் போராளியான ஜோஷுவா வாங் மீது கீழ் இரண்டாவது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஏற்கெனவே, அதிகா... மேலும் பார்க்க

ஹமாஸ் போட்டிக் குழுவுக்கு ஆயுத உதவி! - இஸ்ரேல் ஒப்புதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக செயல்படும் உள்ளூா் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் காஸாவில் குற்றச் செயல்களை மேற்கொள்வோருக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் வழங... மேலும் பார்க்க

நைஜா் - வெளியேறும் செஞ்சிலுவைச் சங்கம்!

ராணுவ ஆட்சி நடைபெறும் நைஜரில் இருந்து வெளியேறுவதாக சா்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது. அந்த நாட்டு ராணுவத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தத் தொண்டு அமைப்பு கூறியது. இரண்டு ஆண்டுகளுக... மேலும் பார்க்க

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் ... மேலும் பார்க்க