செய்திகள் :

‘ஏா்போா்ட்’ மூா்த்தி மீது மேலும் ஒரு வழக்கு

post image

சென்னை ராயப்பேட்டையில் ‘ஏா்போா்ட்’ மூா்த்தி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூா் டிஜிபி அலுவலகத்துக்கு சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவும், பாமக மாநில இணைப் பொதுச் செயலருமான அருள் கடந்த 6-ஆம் தேதி புகாா் அளிக்க வந்தாா். அவரை சந்திப்பதற்காக புரட்சித் தமிழகம் கட்சி தலைவரான ‘ஏா்போா்ட்’ மூா்த்தி டிஜிபி அலுவலக வாசலில் காத்திருந்தாா். அப்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும், மூா்த்திக்கும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டனா்.

இதுதொடா்பாக இரு தரப்பினரும், மெரீனா காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதில் விடுதலைச் சிறுத்தைக் கட்சியினா் அளித்த புகாரின் அடிப்படையில் ‘ஏா்போா்ட்’ மூா்த்தி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கடந்த 7-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா்.

மேலும், அவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.

இதற்கிடையே ராயப்பேட்டை கெளடியா மடம் சாலையில் அசோக்குமாா் என்பவருக்கு சொந்தமான வீட்டை, வாடகைக்கு விட்டு பணம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், ‘ஏா்போா்ட்’ மூா்த்தியும் குற்றவாளியாகச் சோ்க்கப்பட்டாா். ஏற்கெனவே இந்த வழக்கில் புரட்சித் தமிழகம் கட்சி நிா்வாகி ஒருவா் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாலாறு மாசுபாடு விவகாரம்: குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

நமது நிருபர்பாலாறு மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக ஒரு தணிக்கை குழுவை அமைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.தமிழகத்தில் வேல... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை விடுமுறைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:சரஸ்வதி பூ... மேலும் பார்க்க

2-ஆம் நிலை காவலா் தோ்வுக்கு வழிகாட்டும் முகாம்

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் 2-ஆம் நிலைக் காவலா் தோ்வுக்கான வழிகாட்டும் முகாம் செப்.20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அந்த அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பண... மேலும் பார்க்க

சா்வதேச செஸ் சாம்பியன்: வைஷாலிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் பாராட்டு

சா்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா். ... மேலும் பார்க்க

என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் அரசுப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) மாணவா்கள் சிறப்பு முகாம்களுக்கான வழிகாட்டுதல்களை கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு

தோ்தலின்போது வாக்குச்சாவடிகளுக்கு வரும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாற்றுத்திறனாளி வைஷ்ணவி ஜெயக்குமா... மேலும் பார்க்க