செய்திகள் :

ஏ.டி.எம் பரிவர்த்தனைகளுக்கு இன்று முதல் கட்டணம் உயர்வு! - எவ்வளவு தெரியுமா?

post image

ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்கு ஆகும் கட்டண விதிமுறைகளை மாற்றி அறிவித்திருந்தது இந்திய ரிசர்வ் வங்கி. அவை இன்று முதல் (மே 1) அமலுக்கு வர இருக்கிறது.

என்ன மாற்றம்?

வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் ஏ.டி.எம்களில் இருந்து ஐந்து முறை இலவசமாக பணம் எடுக்க முடியும்.

வங்கி கணக்கு இல்லாத வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் ஏ.டி.எம்களில் இருந்து நகரங்களில் மூன்று முறையும், கிராமப்புறங்களில் ஐந்து முறையும் இலவசமாக பணம் எடுத்துகொள்ளலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி

அதற்கு மேல் இருந்தால்...

புதிய அறிவிப்பின் படி, குறிப்பிட்ட அளவுக்கு மேல், ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் ரூ.23 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

ஏன் இந்த மாற்றம்?

நாம் வங்கிகளில் பணம் எடுக்கும்போது, அதற்கான சேவைக் கட்டணம் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டியதாக இருக்கும். அதனால், அந்த சேவைக் கட்டணத்திற்காக தற்போது இந்திய ரிசர்வ் வங்கி இந்த விலை ஏற்றத்தை அறிவித்துள்ளது.

நாம் பிற வங்கிகளின் ஏ.டி.எம்களில் பணம் எடுக்க, நமது வங்கிகள் அந்த வங்கிகளுக்கு கட்டணங்களை செலுத்தும். அதை ஈடுகட்டும் விதமாக, பிற வங்கிகளின் ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும்போது, கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நேற்று வரை, இந்தக் கட்டணம் ரூ.21 வரை தான் வசூலிக்கப்பட்டது. இன்று, புதிய அறிவிப்பின் படி, ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

`ஏ.டி.எம்களில் ரூ.100, ரூ.200 கட்டாயம் வேண்டும்' - RBI உத்தரவு; மக்களுக்கு லாபம் என்ன?

வங்கி ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுக்கிறோம் என்றால் நமக்கு பெரும்பாலும் கிடைப்பது ரூ.500 நோட்டுகள் தான்.இதை குறைக்கவும், மக்களிடையே ரூ.100 மற்றும் ரூ.200 பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் இந்திய ரிசர்வ் வ... மேலும் பார்க்க

சஞ்சய் அகர்வால்: '8-வது ஃபெயில்; இப்போது வங்கிக்கு ஓனர்'- 1 பில்லியன் டாலர் அதிபதியின் வெற்றிக் கதை!

எட்டாவது ஃபெயில், பட்டயக் கணக்காளர் தேர்வில் இரண்டு முறை தோல்வி எனத் தோல்விகள் பலமுறை தழுவுகிறது. இருந்தும், அனைத்திற்கும் டப் கொடுத்து இப்போது ஒரு வங்கியின் வெற்றிகரமான தலைமை நிர்வாக அதிகாரியாக வலம் ... மேலும் பார்க்க

``கடன் பெற்றவர்களின் ஒப்புதல் இல்லாமல் EMI-ஐ அதிகரிக்க கூடாது'' - RBI உத்தரவு

இ.எம்.ஐ - இன்று பலர் வாயிலும், வாழ்க்கையிலும் புழங்கும் ஒன்று. வங்கிகள் திடீரென்று இ.எம்.ஐயை ஏற்றுகிறது, அதன் கால அளவை நீட்டிக்கிறது. இது வாடிக்கையாளர்களுக்கு பெரிய ஷாக்கோ ஷாக். இதை தடுக்க இந்திய ரிசர... மேலும் பார்க்க

தங்க நகைக் கடனுக்கு புதிய விதிமுறை: விழிபிதுங்கும் மக்கள்; RBI உத்தரவால் யாருக்கு லாபம்?

ரிசர்வ் வங்கியின் புதிய விதிவங்கிகளில் பெற்ற தங்க நகைக் கடன் தொகைக்கு ஆண்டுதோறும் வட்டித் தொகையை மட்டும் செலுத்தி மறுஅடகு வைக்கலாம் என்றிருந்த நிலையில், தற்போது அசலுடன் வட்டியையும் சேர்த்து செலுத்த வே... மேலும் பார்க்க