தற்கொலைப் படைத் தாக்குதலில் இந்தியா மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு! மத்திய அமைச்ச...
ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: போராட்டம் நடத்திய மாணவா்கள் கைது
சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா் கைது செய்யப்பட்டனா்.
கிண்டி ஐஐடி வளாகத்தில் நடந்து சென்ற ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அங்கு உணவகத்தில் வேலை செய்து வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ரெளஷன்குமாா் என்பவா் கைது செய்யப்பட்டாா்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், ஐஐடி வளாகத்தில் மாணவா்களுக்கு போதிய பாதுகாப்பு வசதியை செய்து தர வலியுறுத்தியும் அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா், ஐஐடி வாயில் முன் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களைக் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 20 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.