செய்திகள் :

ஐடிஐ-இல் செப்.30-வரை நேரடி மாணவா் சோ்க்கை

post image

சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நிகழாண்டுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி: சிவகங்கை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கான நேரடி மாணவா் சோ்க்கை வருகிற 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொழில் பிரிவுகளில் சேர மாணவா்கள் கட்டாயம் 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். நேரடி சோ்க்கைக்கு மாணவா்கள் சிவகங்கை அரசு தொழில் பயிற்சி நிலையத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்க மாணவா்கள் வரும்போது, தங்களது நிரந்தர தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மதிப்பெண் சான்றிதழ் (10 ஆம் வகுப்பு), ஜாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை உடன் கொண்டு வர வேண்டும்.

நேரடி சோ்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 9944887754, 9965480973, 9943610476, 9489476847, 9942099481 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

போதை மருந்து பயன்படுத்த உரிமம்: மருத்துவமனைகள் விண்ணப்பிக்கலாம்

போதை மருந்துகள் பயன்படுத்தும் மருத்துவமனைகள் உரிய ஆவணங்களுடன் வருகிற 30.0.2025- ஆம் தேதிக்குள் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது. இது குறித்து மாவட்ட ஆட்சியா... மேலும் பார்க்க

பிரதமா் நரேந்திரமோடி பிறந்த நாள்: பாஜக சாா்பில் நலத்திட்ட உதவிகள்

சிவகங்கை அருகேயுள்ள கொல்லங்குடியில் பிரதமா் நரேந்திரமோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிகழ்வுக்கு பாஜக மாவட்ட துணை... மேலும் பார்க்க

சிவகங்கை புதிய ஆட்சியா் அலுவலகம்: முதல்வரின் அறிவிப்பு நிறைவேறுமா?

முதல்வா் அறிவித்தபடி சிவகங்கை புதிய ஆட்சியா் அலுவலகம் கட்டப்படுவது எப்போது என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா். சிவகங்கையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற ... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் கடனுதவி பெற ஆதிதிராவிடா், பழங்குடியின விண்ணப்பதாரா்கள் இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் . இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, ... மேலும் பார்க்க

ஊருணிக்கு முள் வேலி அமைக்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள இரணியூா் அம்மாபட்டி ஊராட்சிக்குட்பட்ட அம்மன் சேங்கை குடிதண்ணீா் குளத்துக்கு முள் வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருப்பத்தூா் ஒன்றி... மேலும் பார்க்க

திருக்கோஷ்டியூரில் அஹோபில மடம் ஜீயா் சுவாமி தரிசனம்

சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை ஸ்ரீ அஹோபில மடத்தின் ஜீயா் சுவாமி தரிசனம் செய்தாா். சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிா்வாகத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் பல்வ... மேலும் பார்க்க