செய்திகள் :

``ஐந்தே மாதத்தில்... எதிர்க்கட்சியினரின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி உள்ளோம்" - முதல்வர் ஸ்டாலின்

post image

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டது தமிழ்நாட்டையே அதிரவைத்தது. பல அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்து விசாரித்துவந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு இன்று காலை தீர்ப்பளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில் ஞானசேகரன் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்த தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றனர். அதே நேரம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ``இந்த தீர்ப்பு வரவேற்கத் தக்கதுதான். ஆனால், இந்த வழக்கின் மிக முக்கியமான கேள்வியான யார் அந்த சார் என்பதற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஐந்தே மாதத்தில்...

அதைத் தொடர்ந்து இந்த தீர்ப்பு குறித்து தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், ``சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும் அரசு வழக்கறிஞர்களுக்கும் மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி! காவல்துறையினரிடம் நான் தொடர்ந்து கூறுவது: “குற்றம் நடக்கக் கூடாது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது; விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்!”.

குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம். சட்டநீதியையும் - பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'70+ வயதினருக்கு மத்திய அரசு வழங்கும் இலவச ரூ.5 லட்சம் காப்பீடு' - எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB PM-JAY) ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் இயங்குவது தான் 'ஆயுஷ்மான் வயோ வந்தனா' திட்டம்.இதில் ஒரு கு... மேலும் பார்க்க

PMK: "எவ்வளவோ அபாண்டமான பழிகளைச் சுமந்திருக்கிறேன்" - நிர்வாகிகள் மத்தியின் அன்புமணி உருக்கம்

'அன்புமணி ஆலோசனை...'பனையூரில் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டத்தை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்தி முடித்திருக்கிறார்.ராமதாஸுக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில்,... மேலும் பார்க்க

DOGE-ல் இருந்து விலகிய மஸ்க்... ட்ரம்ப் - எலான் மஸ்க் நட்பில் விரிசலா; ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

'அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் இடையே மனக்கசப்போ?' என்கிற கேள்வி நேற்று முன்தினத்தில் இருந்து உலகில் வட்டமடித்து வருகிறது.'ஒரு ஸ்ட்ரைட் ஆண் மற்றொரு ஆணை எவ்வளவு காதலிக்க முடியுமோ, அ... மேலும் பார்க்க

MDMK: "மாநிலங்களவை உறுப்பினர் சீட் தராதது வருத்தம்தான்; ஆனால்..." - துரை வைகோ சொல்வது என்ன?

மாநிலங்களவை உறுப்பினர் சீட் தராதது வருத்தமாகத்தான் இருக்கிறது என்று ம.தி.மு.க முதன்மை பொதுச்செயலாளர் துரை வைகோ பேசியிருக்கிறார்.திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ம.தி.மு.க. முதன்மைச் செயலாளருமான துரை ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரசு ஊழியர் கைது... காங்கிரஸைச் சாடும் பாஜக! - என்ன நடந்தது?

பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) அமைப்புக்காக உளவு பார்த்ததாகக் கூறி, காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரின் முன்னாள் தனிப்பட்ட உதவியாளரும் தற்போதைய அரசு ஊழியருமான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள... மேலும் பார்க்க