செய்திகள் :

ஐபிஎல் நெறிமுறைகளை மீறிய ஹார்திக் பாண்டியா, நெஹ்ராவுக்கு அபராதம்!

post image

ஐபிஎல் நெறிமுறைகளை மீறிய ஹார்திக் பாண்டியா, குஜராத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றிரவு அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் - மும்பைக்கு எதிரான மழையால் பாதிக்கப்பட்ட பரபரப்பான போட்டியில் குஜராத் அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் மெதுவாக பந்துவீசியதாகக் கூறி மும்பை அணி கேப்டன் ஹார்திக் பாண்டியாவுக்கும், போட்டியின் நெறிமுறைகளை மீறியதாகக் கூறி குஜராத் பயிற்சியாளர் நெஹ்ராவுக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

மெதுவாகப் பந்துவீசியதற்காக ஹார்திக் பாண்டியாவுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் மூளையதிர்ச்சி மாற்றுவீரர் (concussion substitute), இம்பாக்ட் பிளேயர் உள்ளிட்ட மற்றவீரர்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆஷிஷ் நெஹ்ராவுக்கு எதற்காக அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை. ஆனால், போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் அவர் கடுமையாக நடந்துகொண்டதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கள நடுவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதையும் பார்க்க முடிந்தது.

நெஹ்ராவுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதமும், ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டது. அவர் ஐபிஎல் விதி 2.20-ன் கீழ் லெவல் 1 குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதனால், களநடுவரின் தீர்ப்பே போதுமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதையும் படிக்க: இறுதிக்கட்டத்தை எட்டும் ஐபிஎல்! பிளே-ஆஃப் பந்தயத்தில் நீடிக்கப் போவது யார்?

ஐபிஎல் மே மாதத்திலேயே நடத்தப்பட்டால்... எங்கு நடத்தப்படும் தெரியுமா?

ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் மே மாதத்திலேயே நடத்தப்பட்டால், இந்தியாவின் மூன்று முக்கிய நகரங்களில் நடத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் கார... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகள்..! நெகிழ்ந்த சிஎஸ்கே வீரர்!

சிஎஸ்கே வீரர் டெவால்டு ப்ரீவிஸ் சென்னை ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 22 வயதான டெவால்டு ப்ரீவிஸ் மாற்று வீரராக சிஎஸ்கே அணியில் இணைந்தார். சிறப்பாக விளையாட... மேலும் பார்க்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - தில்லி போட்டி மீண்டும் தொடங்குமா?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இதன் விளைவாக, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் அதிகரித்து, இரு தரப்பிலிருந்தும் தா... மேலும் பார்க்க

ஐபிஎல் நிறுத்தம்: எஞ்சிய போட்டிகளை நடத்திக்கொள்ள இங்கிலாந்து அழைப்பு

புது தில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐ.பி.எல். போட்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், எஞ்சிய போட்டிகளை தங்கள் நாட்டில் நடத்திக் கொள்ள இங்கிலாந்து கிரிக... மேலும் பார்க்க

ரசிகர்களுக்கு ஐபிஎல் டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் அணிகள்!

ஐபிஎல் தொடர் அடுத்த ஒரு வாரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பியளிக்கும் பணியை அணிகள் தொடங்கியுள்ளன.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா... மேலும் பார்க்க

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் எப்போது நடைபெறும்?

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் ஒரு வாரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி க... மேலும் பார்க்க